• May 03 2024

திடீரென முதல் கணவரை நேரில் சந்தித்த அமிர்தா- செம சந்தோஷத்தில் இருக்கும் ஈஸ்வரி- சமாதானப்படுத்திய எழில்- Baakiyalakshmi Serial

stella / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

இனியாவை சில ஆண்கள் தொந்தரவு செய்ய பாக்கியா போய் என்ன என்று கேட்கின்றார்.தொடர்ந்து அவர்களைத் திட்டி அனுப்பி விட்டு இனியாவைக் கூட்டிக் கொண்டு போகின்றார். பின்னர் ரூமுக்குள் இருக்கும் போது ஈஸ்வரி ஆண்கள் துணையில்லாமல் நாங்க மட்டும் வந்திருக்கிறது ஜாலியாத் தான் இருக்கு என இப்பிடி மாதம் ஒருமுறை வந்து போகனும் என்கின்றார்.


ஈஸ்வரி இப்படி பேசுவதைப் பார்த்த பாக்கியா நீங்களா அத்தை அப்பிடிப் பேசிறது என்று கேட்கின்றார். அத்தோடு செல்வியும் நீங்கக வெளில போகும் போது என்னையும் தான் கூட்டிட்டு போகனும் என்று சொல்ல எல்லோரும் சேர்ந்து சிரிக்கின்றனர்.மறுபுறம் அமிர்தாவின் முதல் கணவரான கணேஷ், வீட்டுக்குள்ளே இருக்க விசராக இருக்கின்றது. எங்கையாவது போய்ட்டு வருவோமா, அமிர்தாவின் ஊருக்கு போய்ட்டு வருவமா என்று கேட்கின்றனர்.

அதற்கு அமிர்தாவின் அப்பா, அவங்க எங்க இருக்கிறாங்க என்றே தெரியாது. அமிர்தாவின் போன் நம்பரும் என்கிட்ட இல்லை என்று சொல்ல,நீங்க ஏதோ மறைக்கிறீங்க, எதுக்காக அமிர்தாவை அனுப்பி வைத்தீங்க என்று கேட்க, அவங்க தங்களுடைய பொண்ணை கூட்டிட்டு போய்ட்டாங்க, அவங்க ஊர்லையே இல்லை என்று சொல்ல கணேஷ்  நீங்க என்கிட்ட எதையோ மறைக்கிறீங்க உண்மையைச் சொல்லுங்க என்று கேட்கின்றார்.


இருந்தாலும் அவர்கள்கணேஷை சமாளித்து விட்டு துாங்க அனுப்பி வைக்கின்றனர். தொடர்ந்து அமிர்தா கணேஷ் வந்து தன்னைக் கூப்பிடுவது போலவும் தன்னை விரட்டி வருவது போலவும் கனவு காண்கின்றார்.இதனால் திடீரென எழுந்து தண்ணீர் எடுக்கும் போது தண்ணீர் போத்தல் கீழே விழுந்து விட எழிலும் எழும்பி என்ன என்று கேட்கின்றார்.


அப்போது அமிர்தா, கணேஷை கனவில் கண்ட விசயத்தைச் சொல்ல, எழில் அதெல்லாம் ஒன்றும் இருக்காது நீ பயப்பிடாமல் துாங்கு என்று அமிர்தாவை துாங்க வைக்கின்றார்.பின்னர் விடிந்ததும் இனியா கிளம்பிட்டு இருக்க பாக்கியா எல்லாம் எடுத்து வைச்சிட்டியா என்று கேட்டுக் கொண்டே தன்னுடைய பர்ஸை காணவில்லை என்று தேடுகின்றார். பதிலுக்கு செல்வியும் ஈஸ்வரியும் கூட தேடுகின்றனர். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement

Advertisement