• May 07 2024

கழுத்தில் மாலை அணிந்து... இசையமைப்பாளருடன் ரொமான்ஸ் செய்யத் தயாரான ஐஸ்வர்யா ராஜேஷ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் ஆனந்த் ரவிச்சந்திரன். இவரின் இயக்கத்தில் தற்போது புதிய படம் ஒன்று உருவாகி வருகின்றது.

பெயரிடப்படாத இப்புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்முறையாக நடிக்க இருக்கின்றார். மேலும் இவர்களுடன் காளி வெங்கட், இளவரசு,ரோஹிணி, ‘தலைவாசல்’ விஜய், கீதா கைலாசம், ‘பிளாக் ஷீப்’ நந்தினி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்களும் நடிக்கிறார்கள்.


அதுமட்டுமல்லாது ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைக்கிறார். அத்தோடு கிருபாகரன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள  இப்படத்தின் கலை இயக்கத்தை பிரகதீஷ் கவனிக்கிறார். ஆடை வடிவமைப்பாளராக அனுஷா மீனாட்சி பணியாற்ற உள்ளார்.


மேலும் இந்த படத்தில் இடம்பெறும் பாடலொன்றை ராப் பாடகரும், பாடலாசிரியருமான அறிவு எழுதுகிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை நட்மெக் புரொடக்ஷன்ஸ் எனும் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் வருண் திரிபுரனேனி, அபிஷேக்  ராம் ஷெட்டி மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் அமோகமாக தயாரிக்கிறார்கள். 


இப்படத்தின் தொடக்க விழா ஆனது சமீபத்தில் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் க்யூப் நிறுவனத்தைச் சார்ந்த சதீஷ் மற்றும் அனில், ‘கட்டப்பாவ காணோம்’ பட இயக்குநர் மணி, ‘பேச்சுலர்’ பட இயக்குநர் சதீஷ், ‘ஓ மணப்பெண்ணே’ பட இயக்குநர் கார்த்திக் சுந்தர், எஸ் பி சினிமாஸ் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 


இன்னொரு விடயம் என்னவெனில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி தேசிய விருதைப் பெற்ற 'காக்கா முட்டை' படத்திற்கு இசையமைத்தவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இந்நிலையில் இந்த இரண்டு திறமைசாலிகளும் முதன்முறையாக இணைந்து நடிக்கவிருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement