• May 06 2024

நம்ம உலக அழகிக்கா இந்த நிலை..? ஐஸ்வர்யா ராயின் சமீபத்திய புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'இருவர்' என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இருப்பினும் இவர் பாலிவுட் படங்களில் தான் அதிகளவில் கவனம் செலுத்தி வந்தார்.


உலக அழகியாகத் திகழ்ந்து வந்த இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் சிறந்த குடும்ப வாழ்க்கைக்கு எடுத்துக் காட்டாக ஒரு மகளும் உள்ளார்.


திருமணத்திற்குப் பின்னர் ஐஸ்வர்யா ராய், தனது மனதுக்கு நெருக்கமான கதைகளை அதிகம் தேர்ந்தெடுத்து நடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் 'பொன்னியின் செல்வன்-2' வெளியானது. 

இந்நிலையில் ஐஸ்வர்யா ராயின் சமீபத்திய புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது அப்புகைப்படத்தில் ஐஸ்வர்யா ராயின் மேக்கப்பையும் தாண்டி அவரின் முகத்தில் உள்ள சுருக்கங்கள் தெளிவாகத் தென்படுகின்றன. இதனைப் பார்த்த ரசிகர்கள் பள பளன்னு ஜொலித்த நம்ம உலக அழகிக்கா இந்த நிலை எனக் கேட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement