• May 09 2024

பத்திரிக்கை போட்டோஷூட்டில் கலந்து கொண்டு ரூபாய் 1,500 ஐ மட்டும் சம்பளமாகப் பெற்ற ஐஸ்வர்யா ராய்

stella / 1 year ago

Advertisement

Listen News!

1997 ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த இருவர் என்னும் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ஐஸ்வர்யா ராய். இவர் படத்தில் நடிக்க முதல் மாடலிங் துறையில் இருந்து வந்தார் என்பதோடு உலக அழகிப் பட்டத்தைப் பெற்றவர். இதன் பின்னரே படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

உலக அளவில் பிரபலமான இவர் தனது 18 வயதில் பத்திரிக்கை போட்டோஷூட் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார் .அந்த போட்டோஷூட்டிற்கு ஐஸ்வர்யா ராய்க்கு ரூபாய் 1,500 சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது அந்த சம்பளத்தில் பில் காப்பி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

அந்த போட்டோஷூட் புகைப்படங்களை விமல் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகை படங்களை பார்த்தவர்கள் ஐஸ்வர்யா ராய் பார்ப்பதற்கு வித்தியாசமாக உள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்

மேலும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு ஐஸ்வர்யா ராய்யும் அவர் கணவர் அபிஷேக் பச்சனும், மகள் ஆராத்யாவும் கலந்து கொண்டுள்ளனர் . அந்த விழாவில் ஐஸ்வர்யா ராய் சிவப்பு கம்பளத்தில் நடந்து சென்றுள்ளார் . அதனை பார்த்த சமூக வலைத்தள பாவனையாளர்கள் அவரை உருவ கேலி செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அவர் மகள் ஆராத்தியின் கையை விடாமல் பிடித்து வைத்து கொண்டுள்ளார் அதனையும் விமர்சனம் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Advertisement

Advertisement

Advertisement