• May 03 2024

ஹேமமாலினி இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா...? அடேங்கப்பா நம்பவே முடியல..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவின் பழம்பெரும் நடிகையும் அரசியல்வாதியுமாகத் திகழ்ந்து வருபவர் நடிகை ஹேமமாலினி. இவர் இன்றைய தினம் தனது 74-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அதாவது கடந்த 1948 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி தமிழ்நாட்டின் அம்மன்குடி கிராமத்தில் பிறந்த இவருக்கு சினிமாவில் புகழ் வெளிச்சத்தை கொடுத்தது என்றால் அது பாலிவுட் திரையுலகம் தான். 


ஒரு சமயத்தில் பாலிவுட்டின் 'ட்ரீம் கேர்ள்' ஆக வலம் வந்த இவர் அங்கு ஏராளமான பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக பல படங்களிலும் பிஸியாக நடித்து வந்த ஹேமமாலினி கடந்த 1980-ஆம் ஆண்டு பாலிவுட் ஹீரோவான தர்மேந்திராவை திருமணம் செய்துகொண்டு அவருக்கு இரண்டாவது மனைவி ஆனமை நாம் அனைவரும் அறிந்த ஒரு விடயமே.


இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் இவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இதனைத் தொடர்ந்து இவர் பற்றிய பல சுவாரசியமான தகவல்களும் வெளிவந்த வண்ணமே தான் இருக்கின்றன. அந்தவகையில் தற்போது அவரின் சொத்து மதிப்பு தொடர்பான ஒரு செய்தி வெளியாகி இருக்கின்றது.


அதன்படி ஹேமமாலினி பல கோடி ரூபாய் சொத்துக்களுக்கு சொந்தக்காரர் எனத் தெரியவந்துள்ளது. அதாவது இவருக்கு ரூ.440 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் ஹேமமாலினி நடிப்புத் திறமைக்கு மட்டுமல்ல, புடவைக்கும் பெயர் பெற்ற ஒரு நடிகை ஆவார். 


இருப்பினும் ஆரம்பத்தில் அவருக்கு புடவை அணியவே பிடிக்காதாம். ஆனால் அவரது தாயார் தான் கட்டாயப்படுத்தி புடவை அணிய வைப்பாராம். அதிலும் ஹேமமாலினி அணியும் காஞ்சிபுரம் பட்டு சேலைகளைப் பார்த்து, சினிமா தயாரிப்பாளர்களின் மனைவிகள் ஒரு சிலர் கேலி செய்ததையும் அவர் பேட்டி ஒன்றில் மிகவும் சுவாரஸ்யமாக கூறியுள்ளார். 


அதாவது தான் பாரம்பரிய உடையை உடுத்தியதைப் பார்த்தால் 'மதராசி வந்திருக்கிறாள்' என சொல்லி அவர்கள் தன்னை அடிக்கடி கேலி செய்ததாக கூறி இருந்தார்.

மேலும் ஹேமமாலினி தான் சினிமாவில் இந்த அளவு உயரத்தை அடைந்ததற்கு தனது தாயார் தான் காரணம் என்றும், அவரின் ஆதரவு மற்றும் ஊக்கத்தால் மட்டும் தான் இதெல்லாம் சாத்தியமானது என அவர் தெரிவித்துள்ளார். 

அதுமட்டுமின்றி கிளாசிக்கல் நடனம் கற்க தன்னை ஊக்கப்படுத்தியது தனது அம்மா தான் என பெருமையுடன் கூறி இருக்கிறார் ஹேமமாலினி. எனவே ஹேமமாலினி இந்தளவுக்கு சொத்துக்களுடன் வாழ்ந்து வருவதற்கு காரணம் அவரின் அம்மா தான் என்பது புரிகின்றது.

Advertisement

Advertisement

Advertisement