விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எந்தளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாகின்றனவோ அந்தளவுக்கு அந்நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களும் எளிதில் பிரபல்யமடைந்து விடுவார்கள்.
அவ்வாறாக விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி. நடிகர், நடிகைகளுக்கு எந்தளவிற்கு ரசிகர் கூட்டம் இருக்கின்றதோ அந்தளவிற்கு இவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்தளவிற்கு இவர் மக்கள் மத்தியில் பிரபலமாக காரணமாக இருந்தவை இரண்டு நிகழ்ச்சிகள் தான். அதாவது 'ஜோடி' மற்றும் 'காஃபி வித் டிடி' என்பவை தான்.
இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் இன்று வரை யாராலும் எளிதில் மறக்க முடியாத அளவிற்கு மனதில் இடம்பிடித்துள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து இவர் தற்போது திரைப்படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகின்றார்.
இந்நிலையில் தொகுப்பாளினி டிடி அண்மையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்று கொண்டுள்ளார். இதில், காணொளியின் மூலம் இணைந்து பலரும் பல கேள்விகளைக் கேட்டு இருந்தனர். அதில் திவ்யதர்ஷினியிடம் இயக்குநர் ஒருவர் "நீங்கள் விஜய் டீவியை விட்டு வெளியே செல்ல வாய்ப்புகள் இருக்கிறதா" என்று கேள்வி கேட்டார்.
அதற்குப் பதிலளித்த திவ்யதர்ஷினி "அது அப்படியே அமைந்து விட்டது. ஆனால், தற்போது பல விஷயங்கள் மாறிவிட்டன. என்னுடைய உடல்நலம் காரணமாக விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க முடியவில்லை.
இருப்பினும் சில நிகழ்ச்சிகளை தேர்ந்தெடுத்து தொகுத்து வழங்குகிறேன். ஆனால், எனக்கும் புதிய நிகழ்ச்சிகள் செய்யவேண்டும் என்று ஆசை இருக்கிறது. எங்கு வேண்டுமானாலும் அதை செய்யலாம் என்று நினைக்கிறன்" என்று கூறியுள்ளார்.
டிடி இவ்வாறு கூறியதைக் கேட்ட கேட்ட ரசிகர்கள் "விஜய் டீவியில் இருந்து வெளியேற டிடிக்கு விருப்பம் இருக்கிறது தெரியவந்துள்ளது" எனக் கூறி வருகின்றனர்.
Listen News!