• Apr 27 2024

நடிகை விஜயலட்சுமி விவகாரம்... சீமான் வீட்டிற்கு நேரடியாக சென்ற போலீஸ்... சீமான் தரப்பு எடுத்த அதிரடி முடிவு..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்ற விடயம் என்றால் சீமான்-விஜயலட்சுமி விவகாரம் தான். அதாவது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்டாயத்தின் பேரில் ஏழு முறை கருக்கலைப்பு செய்ததாக அளித்த புகாரின்பேரில் நடிகை விஜயலட்சுமிக்கு சமீபத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. 


அந்தவகையில் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடந்த 2011-ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி  வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை அளித்தார் . இந்த புகாரின் பேரில் சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் அவரை கைது செய்யவில்லை.


இதனைத் தொடர்ந்து சமீபத்தில் பாலியல் வழக்கில் அவரை கைதுசெய்யக்கூறி காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்றப்பட்டுள்ளது .பின்னர் விஜயலட்சுமி அளித்த புகாரில் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், சீமானிடம் விசாரணை நடத்த கடந்த 9-ம் தேதி ஆஜராகக் கூறி சம்மன் அனுப்பியிருந்தனர்.

ஆனால் அன்றைய தினம் ஆஜராக முடியாது எனக்கூறி 12-ஆம் தேதி ஆஜராக்குவதாக சீமான் தெரிவித்திருந்தார். ஆனால் 12-ஆம் தேதியும் சீமான் ஆஜராகவில்லை. இதனையடுத்து தற்போது சீமானுக்கு 2-ஆவது முறையாக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.


அதிலும் குறிப்பாக சென்னை பாலவாக்கத்தில் உள்ள சீமானின் வீட்டிற்கு நேராக சென்று வளசரவாக்கம் போலீசார் சம்மன் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து நடிகை விஜயலட்சுமி மீது நஷ்ட வழக்கு தொடர சீமான் தரப்பு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement