• May 05 2024

நடிகை ஷோபனா வீட்டில் திருட்டு... போலீஸ் மூலம் அம்பலமான உண்மை... நடிகை எடுத்த அதிரடி முடிவு...!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஷோபனா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர்.


மேலும் 1980 ஆம் ஆண்டு வெளியான 'மங்களநாயகி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 'தளபதி,பொன்மனச்செல்வன், எனக்குள் ஒருவன், சிவா, போடா போடி' உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.


இந்நிலையில் நடிகை ஷோபனா தற்போது சென்னை தேனாம்பேட்டை ஸ்ரீமான் சீனிவாசா சாலையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இரண்டாவது தளத்தில் வசித்து வருகிறார். அந்த வீட்டின் உடைய முதல் தளத்தில் ஷோபனாவின் தாயார் ஆனந்தம் வசித்து வருகிறார். 


அதேபோன்று அந்த வீட்டினுடைய தரைத்தளத்தில் ஷோபனா பரதநாட்டிய பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றார். ஷோபனாவின் வீட்டில் வீட்டில் விஜயா என்ற பெண் கடந்த ஒரு வருட காலமாக பணிப்பெண்ணாக பணி புரிந்து வருகிறார். இவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சூழ்நிலையில் ஷோபனாவின் தாயார் ஆனந்தம் வீட்டில் இருந்த பணம் காணாமல் போனதாகவும், இதில் தமக்கு பணிப்பெண் விஜயா மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறி ஷோபனா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை அளித்துள்ளார்.


ஷோபனா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரது வீட்டுக்கு சென்று தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அந்தவகையில் விஜயா கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரையான காலப்பகுதிக்குள் கிட்டத்தட்ட ரூ.41 ஆயிரம் பணம் திருடியிருந்தமை தெரியவந்துள்ளது.

மேலும் திருடிய பணத்தை வீட்டின் கார் ஓட்டுநர் முருகன் என்பவரிடம் கொடுத்து ஜிபே செயலி மூலம் ஊரில் உள்ள மகளுக்கு அனுப்பியதும் அம்பலமாகியுள்ளது. இவ்வாறான திருட்டுச் சம்பவத்திற்கு மத்தியிலும் ஷோபனா அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ள்ளார்.

அதாவது குறித்த பணிப்பெண் விஜயா தொடர்ந்து தன் வீட்டில் வேலை செய்யட்டும் எனவும், அவர் திருடிய பணத்தை சம்பளத்தில் இருந்து தான் பிடித்துக் கொள்வேன் என்றும், அவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் எனவும் போலீசாரிடம் கூறியுள்ளார். ஷோபனாவின் உடைய இந்த முடிவானது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement