• May 18 2024

நயன்தாரா பற்றிய முக்கிய ரகசியத்தை வெளிப்படையாகக் கூறிய நடிகை சரண்யா பொன்வண்ணன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவில் அறிமுகமாகிய புதிதில் பல இன்னல்களையும் அவப் பெயர்களைச் சந்தித்தாலும் முன்னணி நடிகையாக உயர்ந்து நிற்பவர் தான் நடிகை நயன்தாரா. 15 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இருக்கும் இவர் தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

ஆரம்பத்தில் காதல் தோல்வி, பல சர்ச்சைகள், சரியான படங்களைத் தேர்ந்தெடுப்பதில் சிரமம் போன்ற பல சர்ச்சைகளில் சிக்கி வந்த இவர் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளதோடு அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருக்கின்றார். அத்தோடு இவருக்கு அண்மையில் தான் திருமணமும் முடிவடைந்தது.

இந்த நிலையில் நயன்தாரா பற்றி யாரும் அறியாத புதிய விடயம் குறித்து நடிகை சரண்யா பொன்வண்ணன் பிரபல போட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது இயக்குநர் நெல்சன் இயக்கத்தில்  வெளியான கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நயன்தாராவின் அம்மாவாக நான் நடித்திருப்பேன்  நயன்தாரா யாருடனாவது பேசாமல் இருந்தால் அவர்கள் மிகவும் மோசமானவர்களாக இருப்பார்கள்.

ஏன் என்றால்  நயன்தாரா தனக்கு உண்மையாக  இருக்கக் கூடியவர் தன்னை யாராவது  துன்புறுத்தினால் உடனே அவர்களிடம் இருந்து ஒதுங்கி விடுவார். சினிமாவில் இவ்வளவு இடத்தில் இருக்கும் நடிகை நயன்தாரா தனக்கு பிரச்சனை செய்பவர்களிடம் ஒதுங்கி  இருப்பதை பார்த்து  பிரம்மிப்பாக இருக்கின்றது. பேசுபவர்கள் அப்படி தான் பேசிக்  கொண்டே  இருப்பார்கள். அவர்கள் எல்லாரையும்  சமாளிக்க முடியாது  என நயன்தாரா எதையும் கண்டு கொள்ளாமல்  ஒதுங்கி விடுவாராம்.

மேலும், பல சர்ச்சைகளில்  சிக்கி இருந்தாலும் தற்பொழுதும் லேடி சூப்பர் ஸ்டாராக  திகழ்ந்து வருவது அவருடைய கடின உழைப்பினால் தான் என  சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை சரண்யா பொன்வண்ணன்   கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement