• May 02 2024

பெண் குழந்தைகளுக்கு தாயாகப்போகும் நடிகை சமந்தா! குவியும் வாழ்த்துக்கள்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து எதற்குமே அஞ்சாத ஒரு சிங்கப் பெண்ணாக இன்றுவரை வாழ்ந்து வருகின்றார். சினிமா வாழ்க்கையிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி பல தோல்விகளைச் சந்தித்து இருக்கின்றார்.

இவர் தெலுங்கில் இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் கடந்த  2010-ஆம் ஆண்டு வெளியான 'Ye Maaya Chesave' என்ற படத்தில் நடிகர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்த போது இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நெருங்கிய நட்பு பின்னர் காதலாக மாறியது. 


இதனைத் தொடர்ந்து சில வருடங்கள் டேட்டிங் செய்த இந்த ஜோடி கடந்த 2017 ஆம் ஆண்டு தங்களின் பெற்றோர் சம்மதத்துடன் பிரமாண்டமாக திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் இணைந்தனர். ஆனால் அதன் பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்துள்ளனர். 

நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் பிரிந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர்கள் இருவரும் மீண்டும் இணைய உள்ளதாக சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.


கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மையோசிட்டிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா , தற்போது அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் குஷி என்ற படத்தில் நடித்திருந்தார். 

இரு மொழிகளில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சமந்தா, தற்போது விளம்பரத்திற்காக எடுத்து கொண்ட போட்டோஷூட்டை தனது சோசியல் மீடியாவில் வருகிறார்.


இந்த நிலையில், சமந்தா விரைவில் அம்மாவாக போவதாக தகவல்  வெளியாகியுள்ளது. அதாவது, சமந்தாவுக்கு 2ம் திருமணம் செய்வதில் கொஞ்சம் கூட விருப்பமே இல்லையாம். ஆனால், குழந்தை வேண்டும் என்ற ஆசையில், தன்னார்வத் தொண்டு நிறுவனத்திலிருந்து இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்துள்ளாராம் சமந்தா. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.



Advertisement

Advertisement

Advertisement