• May 04 2024

தவறாக செய்தி பரப்ப வேண்டாம்... வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை நித்யா மேனன்...

subiththira / 7 months ago

Advertisement

Listen News!

நடிகை நித்யா மேனன் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது " தெலுங்கு சினிமாவில் இதுவரை நான் எந்த ஒரு பிரச்சனையையும் சந்தித்தது இல்லை. ஆனால் தமிழ் சினிமாவில் நிறைய பிரச்சனை சந்தித்தேன்.

 ஒரு படத்தின் படப்பிடிப்பு போது தமிழ் சினிமா நடிகர் என்னை துன்புறுத்தினார் " என வெளிப்படையாக கூறியிருந்தார் என்று ஒரு தகவல் சமூகவலை தளங்களில் பகிரங்கமாக பகிரப்பட்டு வந்தது.இந்நிலையில் யார் அந்த நடிகர் என நித்யா மேனன் ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி இருந்தனர்.

அதற்கு பதில் சொல்லும் விதமாக நடிகை நித்யா மேனன் சமூகவலைத்தளத்தில் ஒரு செய்தியை பதிவிட்டுள்ளார். " நான் பேட்டி கொடுத்ததில்லை, இது பொய்யான வதந்தி செய்தி , செய்திகளை பெறுவதற்காக இவ்வாறு தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் "  என்று நடிகை தனது டுவிட்டர் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 



Advertisement

Advertisement

Advertisement