• May 20 2024

ஒரே ஒரு படத்தில் நடித்துவிட்டு நடிப்புக்கு முழுக்கு.. நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு?

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாரா நடித்த சில படங்கள் வரிசையாக தோல்வி அடைந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் விரைவில் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு தனது குழந்தைகளை கவனிப்பார் என்றும் சில படங்களை தயாரிப்பார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இத்தனை காலம் லேடி சூப்பர் ஸ்டார் ஆக தமிழ் திரை உலகில் இருந்துவிட்டு தோல்வியுடன் திரையுலகிலிருந்து வெளியேறக்கூடாது என்றும் ஒரே ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து விட்டு அதன் பிறகு திரையுலகில் இருந்து வெளியேற நயன்தாரா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.



இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், ரஜினி உட்பட சில நடிகர்களுக்கு அவரே போன் செய்து அடுத்த படத்தில் தனக்கு வாய்ப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டிருப்பதாகவும் ஒரே ஒரு திரைப்படம் மாஸ் நடிகருடன் இணைந்து நடித்து ஒரு சூப்பர் ஹிட் வெற்றியுடன் திரையுலகில் இருந்து விலக முடிவு எடுத்து உள்ளாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே நயன்தாரா தனது இரட்டைக் குழந்தைகளை கவனிக்கவே அதிக நேரம் தேவைப்படுவதால் படப்பிடிப்பையும் குறைத்துள்ளார் என்பதும் குழந்தைகளை முழுமையாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அவர் விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தரமான திரைப்படங்களை தயாரிக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிகை நயன்தாராவின் இந்த திட்டத்தை அடுத்து அவருக்கு எந்த மாஸ் நடிகர் தங்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement