• May 03 2024

தனது இரண்டு குழந்தைகளின் பெயரையும் முதன்முறையாக வெளியிட்ட நடிகை நயன்தாரா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் தற்போது ஜவான் என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படம் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக காலடிஎடுத்து வைக்க உள்ளார் நயன்தாரா. இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் . இது தவிர இன்னும் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த வருடம் வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகள் பெற்றனர். திருமணமாகி சில மாதங்களிலேயே குழந்தை பெற்றது பெரிய சர்ச்சை ஆனது.


ஆனால் எங்களுக்கு 5 வருடத்திற்கு முன்பே பதிவு திருமணம் நடைபெற்றுவிட்டது என அவர்கள் விளக்கம் தெரிவித்தனர்.குழந்தைகளுக்கு உயிர் மற்றும் உலகம் என பெயரிட்டு இருப்பதாக விக்னேஷ் சிவன் ஏற்கனவே கூறி இருந்தார்.


இந்நிலையில் சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா தனது மகன்களில் முழு பெயரை அறிவித்து இருக்கிறார்.உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் என தன் இரண்டு மகன்களின் பெயர்களையும் அவர் அறிவித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 



Advertisement

Advertisement

Advertisement