• May 05 2024

மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணாவுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு இரங்கல் தெரிவித்த நடிகை மீனா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவருடைய தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணா மாரடைப்புக் காரணமாக ஜதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்தார். இவருக்கு திரையுலகைச் செர்ந்த பலரும் தமது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணாவுடன் எடுத்துக்கொண்ட சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.


 மேலும், அந்தப் பதிவில்,"செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். ஆழ்ந்த இரங்கல்கள். குடும்பத்திற்கு நிறைய அன்பும் பிரார்த்தனைகளும்" எனக் குறிப்பிட்டு மகேஷ் பாபுவை டேக் செய்திருக்கிறார்.


மேலும் கிருஷ்ணா இதுவரையில் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளதோடு இறுதியாக 2016 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படமான ஸ்ரீ ஸ்ரீ இல் நடித்திருந்தார். இவரது உடல் நாளைய தினம் அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement