• Apr 30 2024

இரண்டு நாட்களாக அழுத நடிகை மகிமா நம்பியார்! காரணம் என்ன தெரியுமா?

sarmiya / 6 months ago

Advertisement

Listen News!

மகிமா நம்பியார் தமிழ், மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் சாட்டை படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு  அறிமுகமானார். இவர்  என்னமோ நடக்குது, மொசக்குட்டி அத்தனை, குற்றம்23, பரியாத புதிர், கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள், அண்ணனுக்கு ஜே, போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடத்தே இடம் பிடித்தவர்.இவர் அண்மையில் வெளிவந்த  சந்திரமுகி 2 திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார்.



நடிகை மகிமா நம்பியார் கொடுத்திருந்த நேர்காணலில், அவர் படங்களை மிகவும் சீரியஸாக பார்ப்பதாக கூறியுள்ளார்.

அவரது சிறிய வயதில், சூர்யாவின் கஜினி திரைப்படம் அவருக்கு மிகவும் பிடிக்குமாம், அந்த படம் தான் அவர் தியேட்டரில் பார்த்த முதல் தமிழ் படமாம். அந்த படத்தை பார்த்து 2 நாட்களுக்கு தொடர்ந்து அழுது கொண்டிருந்தாராம். அந்த படத்தில் சூர்யா மற்றும் அசின்  காதலோடு இருப்பார்கள், ஆனால், கடைசியில் அவர்கள் சேரமுடியாமல் இருக்கும், இதனை பார்த்து மகிமா அழுதாராம். அப்போது அழுததை இப்போது நினைத்து பார்த்தால் சிரிப்புதான் வருகிறது என சிரித்துக் கொண்டே அந்த நேர்காணலில் பேசியிருக்கிறார் மகிமா நம்பியார்.


Advertisement

Advertisement

Advertisement