• May 04 2024

தனது குழந்தை கடற்கரை மணலில் கால் வைத்த புதிய படத்தைப் பகிர்ந்த நடிகை காஜல் அகர்வால்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 2008ம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான பழனி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் நடிகை காஜல் அகர்வால். இப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவுக்குள் நுழைந்த இவர் ராம்சரணுடன் மகதீரா படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்து வசூலில் சாதனை படைத்தது.

இப்பட வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு தமிழ் ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.

படங்களில் பிஸியாக வலம் வந்து கொண்டிருந்த இவர் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் கௌதம் கிச்சுலு என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களது ஹனிமூன் புகைப்படங்களும், ரொமாண்டிக் புகைப்படங்களை அவ்வப்போவது சோஷியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

திருமணத்திற்கு பிறகும் படங்களில் பிஸியாக நடித்துவந்த காஜல் அகர்வால் கர்ப்பகால போட்டோஷூட் நடத்தி ரசிகர்களுக்கு தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் காஜல் அகர்வால் கிச்சுலு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நீல் என பெயர் வைத்துளள்ளனர்.

இந்நிலையில், காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையின் இரண்டு பாதம் தெரியும்படி இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக நீலின் முதல் விடுமுறை பயணம் லீலா கோவா கடற்கரை என குறிப்பிட்டு, குழந்தை கடற்கரை மணலில் கால் வைத்துள்ளது போல இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு தற்போது லைக்குகள் குவித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement