• May 18 2024

சேரிக்கு போனால் இந்த மாதிரி வார்த்தைகளைக் கேட்க முடியும்- சர்ச்சையில் சிக்கிய இரவின் நிழல் பட நாயகி

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்து வெளியாகிய திரைப்படம் தான் இரவின் நிழல். இந்தத் திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.Single Shot-ல் Nonlinear-ஆக எடுக்கப்பட்டுள்ள இப்படம் கடந்த 15ம் திகதி திரையரங்குகளில் வெளியானது.

இப்படம் வெளியாகும் முன்னரே ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்கள் இப்படத்தினை ப்ரமோட் செய்து வந்தனர். அத்தோடு படம் வளியாகி ரசிகர்களின் ஆதரவையும் பெற்று வருகின்றது.

இந்த நிலையில் தற்போது பார்த்திபன் நடிகை பிரிகிடா ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் பல தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்களை நேரில் சந்தித்து நன்றி கூறி வருகின்றனர்.

இந்நிலையில் பிரிகிடா தியேட்டரில் மீடியாவிடம் பேசும்போது 'சேரிக்கு போனால் அந்த மாதிரி (கெட்ட) வார்த்தைகளை தான் கேட்க முடியும், அதை மாற்றி நாம் சினிமாவுக்காக ஏமாற்ற எல்லாம் முடியாது. மக்களுக்கே தெரியும் அங்கே எப்படி பேசுவார்கள் என்று" என பிரிகிடா கூறினார்.சேரி மக்கள் பற்றி நடிகை இப்படி பேசியதற்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம் எழுந்தது. இதற்கு தற்போது பிரிகிடா மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

"இடத்தை பொறுத்து மொழி மாறும் என்பதை தான் கூற வந்தேன்.." என குறிப்பிட்டு பிரிகிடா மன்னிப்பு கேட்டிருக்கிறார். பார்த்திபனும் அவரது ட்விட்டை பகிர்ந்து மன்னிப்பு கேட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement