• Apr 16 2025

திரையுலகில் பெண்களுக்கு மதிப்பு இல்லை...! – நடிகை ஜோதிகாவின் அதிரடிக் கருத்து!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் பெண்களுக்கு சமத்துவம் வேண்டுமென்று பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு வந்தாலும் ஆண்களுக்கே ஆதிக்கம் அதிகம் என்பதைக் காணமுடிகிறது. நடிகை ஜோதிகா இதனை வலியுறுத்தி பெண்களுக்கு இன்னும் சமமான வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்று கடுமையாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்கள் உருவாக்கும் வசூல் மாபெரும் வெற்றிகளால் கதாநாயகிகள் பெரும்பாலும் இரண்டாம் நிலை கதாபாத்திரமாகவே கருதப்படுகிறார்கள். பல திரைப்படங்களில் பெண்களின் கதாப்பாத்திரம் முன்னிலைப்படாது இருப்பது திரையுலகில் நிலவும் பாகுபாடுகளைக் காட்டுகிறது.


ஜோதிகா இது குறித்து கூறியதாவது "திரைப்பட உலகில் பெண்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. நடிகர்களுக்கு ஒரே ஒரு படத்திற்கே கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்படுகிறது ஆனால் நடிகைகளுக்கு அதேயளவு மதிப்பு தரப்படுகிறதா?" என்பது கேள்விக்குள்ளாகியுள்ளது.

மேலும் ஒரு நடிகை திருமணமாகிவிட்டால் அவருக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு குறைவாகின்றது. ஆனால், நடிகர்கள் எந்த வயதிலும் ஹீரோவாக நடிக்க முடிகிறது. இந்த விவகாரத்தில் பெரும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், ஜோதிகாவின் கருத்து பெண்களுக்கான திரையுலக சமத்துவ பேச்சுகளுக்கு மேலும் வலுவூட்டியுள்ளது.


இந்த நிலைமையை மாற்றுவதற்கு பெண்கள் இயக்குநர்களாகவும், தயாரிப்பாளர்களாகவும் அதிகம் வரவேண்டும் என்கிற ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் சமத்துவத்தைக் கொண்டு வருவதற்கு பெண்கள் ஆண்களைப் போலவே திறமையாக இருப்பதை நிரூபிக்க வேண்டும் என்றார் ஜோதிகா.

Advertisement

Advertisement