• May 02 2024

துயர் கடலில் மூழ்கிய இளையராஜா குடும்பம்... இறுதி அஞ்சலி செலுத்த விரைந்து வந்த நடிகர் விஜய்...

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

இளையராஜாவின் மகள் பவதாரிணியின் மரணம் சினிமா திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் உடல் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது. அவரது மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்த, பல்வேறு பிரபலங்களும் வந்த வண்ணம் உள்ளனர்.


அதன்படி, மறைந்த பாடகி பவதாரிணியின் உடல் திநகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து தி.நகர் இல்லத்திற்கு பவதாரிணி உடல் கொண்டு வரப்பட்ட நிலையில், அங்கு இரவு 10 மணி வரை பவதாரிணி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளதாம்.


இந்நிலையில் இளையராஜா மகளின் இறுதி அஞ்சலிக்காக நடிகர் விஜய் அவர்களின் அம்மா சோபா சந்திரசேகரன் அவர்களும் பவதாரிணி அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வருகை தந்திருந்தார். 


Advertisement

Advertisement

Advertisement