தமிழ் சினிமாவின் நடன இயக்குனர், நடிகர் மற்றும் திரைப்பட இயக்குனராகவும் திகழ்ந்த பிரபு தேவா, தனது தனித்துவமான நடனத் திறமை மற்றும் படைப்பாற்றலால் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர்.
சமீபத்தில் பிரபு தேவா சென்னையிலிருந்து ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தின் ஊடாக இலங்கைக்கு பயணம் செய்துள்ளார்.

அவர் இன்று (30-ம் தேதி) கட்டுநாயக்கா விமான நிலையத்தை சென்றடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
பிரபு தேவாவின் வருகை, இலங்கை ரசிகர்களுக்கு பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், இவர் எதற்காக வருகை தந்தார்.? என்ற கேள்வியையும் ஏற்படுத்தியுள்ளது.
Listen News!