• May 19 2024

பிரபல நடிகையுடன் ஊர் சுற்றி திரியும் நடிகர் நாகசைத்தன்யா- மீண்டும் காதலில் விழுந்து விட்டாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் நாகசைத்தன்யா. இவர் பிரபல நடிகையான சமந்தாவை காதலித்து 2017 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.

இவர்களின் பிரிவு ரசிகர்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியது. இவர்களின் பிரிவிற்கு என்ன காரணம் என்று தற்போது வரை தெரியவில்லை. இவர்களை சேர்த்து வைக்க இரு குடும்பத்தினரும் தீவிர முயற்சி செய்ததாக கூறப்பட்டது.

குறிப்பாக மாமனார் நாகர்ஜுனா, இருவரிடமும் சமாதானம் பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் இருவருமே தங்களின் முடிவை மாற்றிக் கொள்ள மறுத்து விட்டதாக கூறப்பட்டது. விவாகரத்திற்குப் பின்னர் இருவரும் தமது கெரியரில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நேரத்தில் நடிகை சோபிதா துலிபலாவுடன் நாக சைதன்யா டேட்டிங் சென்று வருவதை பலரும் கவனித்துள்ளனர். இருவரும் மிக நெருக்கமாக பழகி வருவதால், நாக சைதன்யா மீண்டும் காதலில் விழுந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.
நாக சைதன்யா தற்போது ஐதராபாத்தில் ஜுப்லி ஹில்ஸ் பகுதியில் புதிதாக வீடு ஒன்றை வாங்கி உள்ளார்.

இந்த வீடு தற்போது தான் கட்டப்பட்டு வருகிறது. நாக சைதன்யாவும், சோபிதாவும் இந்த வீட்டிற்கு அடிக்கடி சென்று, அதிக நேரம் ஒன்றாக செலவிட்டு வருகிறார்களாம். வீடு முழுவதையும் சோபிதாவிற்கு சுற்றி காட்டியதோடு இருவரும் ஒரே காரில் புறப்பட்டு சென்றுள்ளனர்.

அது மட்டுமல்ல தான் கடைசியாக நடித்த மேஜர் படத்தின் ப்ரமோஷனுக்காக சோபிதா தங்கி இருந்த ஓட்டலுக்கு நாக சைதன்யா பலமுறை வந்து சென்றுள்ளார். ஐதராபாத்தில் சோபிதாவின் பிறந்தநாளை இருவரும் மிக நெருக்கமாக, உற்சாகமாக கொண்டாடி உள்ளனர்.

சமந்தாவிடம் இருந்து பிரிந்த பிறகு சோபிதா மீது காதலில் விழுந்துள்ளாரா அல்லது சாதாரண ஃபிரண்டாக சோபிதாவின் கம்பெனியை அவர் விரும்புகிறாரா என்றும் பலர் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement