• May 18 2024

சூர்யா அதிகாரி நான் குற்றவாளியா?- சுவாரஸியமான தகவலைக் கூறிய நடிகர் கார்த்தி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களாக அறிமுகமாகி இருந்தாலும் தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்திருக்கும் முக்கிய நடிகர்கள் தான் கார்த்தி மற்றும் சூர்யா. சகோதரர்களாக இருந்தாலும் இருவரும் தமக்கென்று தனித் தனி அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ளதோடு இவர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது.

இவர்கள் இருவரும் தற்பொழுது மாஸ் இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படங்களில் நடித்திருக்கின்றனர். அந்த வகையில் கார்த்தி இவர் இயக்கத்தில் கைதி என்னும் திரைப்படத்திலும் சூர்யா கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருந்த விக்ரம் திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

அத்தோடு விக்ரம் படம் 3ம் பாகம் வரை உருவாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கைதிப் படத்தின் தொடர்ச்சியாக டில்லி என்ற கதாபாத்திரத்தில் கார்த்தியும் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் இருவரும் இணையும் முதல் படமாக விக்ரம் 3 அமையவுள்ளது.

இந்நிலையில் சூர்யா மற்றும் கார்த்தியின் பள்ளி நாட்கள் குறித்து கார்த்தி பேசியுள்ள பழைய வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதில் பேசிய கார்த்தி, தான் பள்ளிக்கு ஆர்வமாக கிளம்பி ரெடியாக அமர்ந்திருந்தாலும் சூர்யா தாமதமாகத்தான் கிளம்புவார் என்று தெரிவித்துள்ளார்.இதனால் பள்ளி துவங்கியபின்பு சென்று அங்கு கைதியை போல நிற்க வேண்டிவரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தன்னுடன் வந்த சூர்யா,அங்கு தாமதமாக வருபவர்களை தடுக்கும் நபராக பேட்ஜ் ஒன்றை அணிந்துக் கொண்டு நிற்பார் என்றும் இதனால் அவர் அதிகாரியாகவும் தான் குற்றவாளியாகவும் மாறுவோம் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் தாமதமாக சென்ற தான் பள்ளி மைதானத்தை சுற்றி 3 முறை ஓட வேண்டிவரும் என்றும் தன்னுடன் இணைந்து அங்கு படித்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் தாமதமாக வந்து மூன்று முறை ஓடுவார் என்றும் அவர் சுவாரஸியமாகத் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement