• May 05 2024

கண்களைத் தானம் செய்யப்போகும் நடிகர் ஜெயராம்... குவியும் பாராட்டுக்கள்..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் எக்கச்சக்க படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பல ஆண்டுகளாக பிரபலமான நடிகராக இருப்பவர் ஜெயராம். 


அந்தவகையில் அவரை கடைசியாக பொன்னியின் செல்வன் படத்திலும் ஒரு முக்கிய ரோலில் நாம் பார்த்திருப்போம். இதில் இவரின் அசால்ட்டான நடிப்பு அனைவரையும் பெரிதும் கவர்ந்திருந்தது.


ஜெயராம் நடிப்பில் மட்டுமல்லாது சமூகநலன் சார் விடயங்களிலும் ஈடுபட்டு வருகின்றார். அந்தவகையில் சென்னை பெசண்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நேற்றைய தினம் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் மற்றும் ராஜன் கண் மருத்துவமனை சார்பில் கண் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


இதில் குறிப்பாக 500 இற்கும் அதிகமான கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஜெயராம் பேரணியிலும் கலந்து கொண்டார். மேலும் அங்கு கண் தானம் செய்வதற்கு ஒப்புதல் தெரிவித்து அதற்கான பத்திரத்தில் கையெழுத்திட்டார். இவரின் இந்த மனிதாபிமானத்தை பாராட்டி பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement