தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சின்னி ஜெயந்த். இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.இந்த நிலையில் இவர் தனது மகன் ஸ்ருதன்ஜெய் நாராயணன் திருப்பூர் சப்-கலெக்டராக பதவி ஏற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதாவது தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் பயிற்சி பெற்று வந்த சப்-கலெக்டர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு சப்-கலெக்டராக நியமிக்கப்பட்டனர். அதன்படி திருப்பூர் சப்-கலெக்டராக பணியாற்றி வந்த பண்டரிநாதன் இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாவட்டத்தில் சப்-கலெக்டராக பயிற்சி பெற்று வந்த ஸ்ருதன் ஜெய் நாராயணன் பணி நியமனம் செய்யப்பட்டார்.
இதையடுத்து புதியதாக நியமிக்கப்பட்ட ஸ்ருதன்ஜெய் நாராயணன் திருப்பூர் சப்-கலெக்டராக இன்று காலை பதவி ஏற்றுள்ளார் பொறுப்பேற்ற பின் ஸ்ருதன்ஜெய் நாராயணன் கூறியதாவது:- எனது முழு உழைப்பும் திருப்பூர் மக்களுக்காக இருக்கும். திரைத்துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் எனது பெற்றோர் சிறு வயது முதலே கல்வியை முதன்மையாக போதித்தனர். அவர்களுக்கு எனது நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.
இதனால் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணனுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!