• May 05 2024

திவ்யாவின் வீட்டிற்கு நடிகர் அர்ணவ் திடீர் விசிட்... கதவைத் திறக்க மறுத்த நடிகை... பதிலடி கொடுத்த கணவன்..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

கேளடி கண்மணி’, ‘மகராசி’ ஆகிய தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த விடயம் என்றால் அது திவ்யா-அர்ணவ் கதை தான். 

அதாவது 'செவ்வந்தி' சீரியில் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருந்த திவ்யா அதே சீரியலில் தனக்கு துணையாக நடித்த அர்ணவ்வை என்ற இஸ்லாமிய நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இந்த திருமணம் இரண்டாவது திருமணம் என்பதால், இவர் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தாலும் அர்ணவ்விற்காக மதம் மாறி திருமணம் செய்துக் கொண்டார்.


அத்தோடு இந்த திருமணத்திற்கு திவ்யாவின் வீட்டில் பெரியளவில் சம்மதம் தெரிவிக்கவில்லை. இருப்பினும் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் சில நாட்களிலேயே பிரிந்து விட்டனர். அதாவது அர்னவ்விற்கு பிரபல சீரியல் நடிகையுடன் தொடர்பு உள்ளதாகவும் அர்ணவ் தன்னை துன்புறுத்துவதாகவும் திவ்யா புகார் அளித்திருந்தார். இதனால் அர்ணவ் ஜெயிலில் அடைக்கப்பட்டார். 


தற்பொழுது அதிலிருந்து ரிலீஸான திவ்யா மற்றும் அர்னவ் ஆகியோர் பிரிந்தே வாழ்கின்றனர். இப்படியான நிலையில் திவ்யா நீண்ட நாளைக்குப் பிறகு அர்னவ் இலங்கைப் பெண் ஒருவரை ஏமாற்றினார் என்றும் அவருக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு என்றும் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.


இதனையடுத்து அர்னவ் "நான் செய்யாத குற்றங்களை எல்லாம் சொல்லிட்டே போறாங்க. அதுக்கெல்லாம் ஆதாரம் இருந்தால் அதைக் கோட்டில் வந்து காட்டட்டும். அவங்க சொல்லுறது எல்லாமே பொய் இப்படி என்மேல பழி போடுவதால் அவங்களுக்கு என்ன கிடைக்கப் போகுதோ தெரியல, இலங்கைப் பெண் என்னோட எக்ஸ் லவ்வர் தான் அவங்களும் நானும் லவ் பண்ணினோம். ஆனால் அவங்களும் குழந்தையை கலைக்கல" என பதிலளித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது திவ்யா தங்கியுள்ள வீட்டிற்கு, பவுன்சர்கள், வழக்கறிஞர்களுடன் நடிகர் அர்ணவ் சென்றுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. மேலும் திவ்யா கதவை பூட்டிக்கொண்டு அர்ணவை அனுமதிக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.

இதனையடுத்து அர்ணவ் தனது வீட்டிற்கு தான் வந்துள்ளதாக விளக்கமளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement