• May 04 2024

செந்திலிடம் உண்மையை மறைத்ததால் எலிப்பொறியில் சிக்கித் தவிக்கும் அர்ச்சனா- சிவகாமிக்கு ஆதி கொடுத்த அதிர்ச்சி

stella / 1 year ago

Advertisement

Listen News!

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் ரவி தன்னுடைய மனைவி சிவகாமிடம் தென்காசி மருத்துவமனையில் குழந்தை கடத்தல் நடந்திருப்பதாக நியூஸ் பேப்பரில் வெளியாகி இருப்பதை படித்துக் காட்ட சிவகாமி இப்படியெல்லாம் கூடவா நடக்கும் என கோபப்படுகிறார். இதைக் கேட்ட அர்ச்சனா கொஞ்சம் அதிர்ச்சியடைய அதன் பிறகு நம்மளே புள்ளைக்கு நாமளா கார்த்தி என்று பேர் வெச்சிட்டோம்.

ஜோசியர் கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்கல என சொல்ல ரவி எனக்கும் இது பற்றி சிந்தனை ஓடிக்கிட்டு தான் இருக்கு என சொல்ல சிவகாமி நம்ம குடும்ப ஜோசியரை பார்த்து நம்ம பேரப் பிள்ளையோட நேரம் எப்படி இருக்கு என்ன ஏதுன்னு கேட்கலாம் என சொல்ல செந்தில் இதுவும் நல்ல ஐடியா தான் நான் தேர்தலில் ஜெயிப்பேனா ஜெயிக்க மாட்டேனா என்று என் புள்ளையோட ஜாதகத்தை வைத்து கேட்டுக்கிறேன் என  சொல்ல அர்ச்சனா பயத்துடன் சரியென சொல்கிறார்.


மறுபக்கம் சரவணன் மற்றும் சந்தியாவின் ரொமான்ஸ் ஓட பிறகு இருவரும் வெளியில் சென்று வந்த பிறகு சரவணன் ஊருக்கு கிளம்ப சந்தியா கண்ணீருடன் அவனை வழி அனுப்பி வைக்கிறார். இதை கவனித்த கௌரி மேடம் சரவணன் சந்தித்து உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் என சொல்லி உங்களுடைய குடும்பம் தான் சந்தியாவுக்கு பலவீனமாக இருக்கிறது என கூறுகிறார். கொஞ்சம் பார்த்து நடந்துக்கோங்க என சொல்லி அனுப்பி வைக்கிறார்.

அதன் பிறகு ஆதி ஜெசி வீட்டில் வாங்கிய பணத்தில் அவளுக்கு ஸ்கூட்டி வாங்காமல் தனக்கு பைக் வாங்கிட்டு வந்து ஜெஸியை சர்ப்ரைஸ் செய்கிறார். ஜெசி வண்டி வாங்க பணம் ஏது என கேட்க அதுகூட என்னால முடியாதா என ஜெசியை ஆப் செய்கிறார்.


பிறகு இருவரும் வண்டியுடன் வீட்டுக்கு வர சிவகாமி திடீர்னு வண்டியோட வந்திருக்கிறேன் இதுக்கு  பணம் எப்படி வந்தது என கேட்க எப்படியோ வந்தது அது எதுக்கு உங்களுக்கு என ஷாக் கொடுக்கிறார். எல்லாத்தையும் உன் கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கணும்னு அவசியம் இல்ல என அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய  எபிசோட் முடிவடைகிறது.


Advertisement

Advertisement

Advertisement