• Jul 27 2024

தன்னிடம் வாய்ப்பு கேட்ட இஸ்லாமிய பெண்ணையும் மடக்கி வச்சிருக்கார் தீனா! காரி துப்பிய பிரபலம்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் மறைந்த பவதாரணியின் கையெழுத்தை போட்டு லட்சக்கணக்கில்  பணத்தை கொள்ளையடித்ததாக இசையமைப்பாளர் தீனா மீது கங்கை அமரன் பகிரங்கமாக குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.

அதாவது சமீபத்தில் நடந்து முடிந்த இசைக்கலைஞர் தேர்தலில் ஏற்கனவே இரண்டு முறை தலைவராக இருந்த தீனா, மூன்றாவது முறையாகவும் போட்டி போடுவதற்கு முனைந்துள்ளார். இவர் இந்த முடிவு இசையமைப்பாளர்களான இளைய ராஜா, கங்கை அமரன் உள்ளிட்டோருக்கு பிடிக்காமல் போக இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்கள்.

அது மட்டும் இன்றி இசையமைப்பாளர் தீனா மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்காக காரணம், அவர் செய்த பண மோசடித்தான், அதிலும் அவர் என்பது லட்சம் ரூபாய் வரை பண மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார் கங்கை அமரன்.

இதை அடுத்து அண்மையில் நடைபெற்ற இசைக்கலைஞர் தேர்தலில் தீனாவை எதிர்த்து போட்டியிட்ட சபேசன் 70 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, தீனா படு தோல்வி அடைந்தார்.


இந்த நிலையில், இது குறித்தும், தீனாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பகிரங்கமாக விமர்சித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

அதன்படி அவர் கூறுகையில், ஏற்கனவே தீனா சட்டவிரோத நடவடிக்கைகள் ஈடுபட்ட நிலையில், சங்க கட்டிடம் கட்ட இளையராஜா மிகப் பெரிய தொகை கொடுப்பதாக இருந்தார். ஆனால் தீனாவின் செயல் சரியில்லாத காரணத்தினால் அவர் அந்த தொகையை கொடுக்கவில்லை.

கங்கை அமரன் கூட தீனாவை காரி துப்பும் அளவிற்கு பேசியிருக்கிறார். அதற்கு காரணம் அவரின் தில்லுமுல்லு  வேலைகள் தான்.


அவர் சினிமா வாழ்க்கை மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையிலும்  மிகவும் மோசமானவர். அவர் வீணை வாசிக்க வந்த பெண்ணை மடக்கி திருமணம் செய்தார். அவருக்கு ஒரு மகள் உள்ளார். ஆனாலும் அவரின் செய்கைகள் பிடிக்காததால் அந்தப் பெண் அவரை விட்டு விலகி விட்டார்.

இதை அடுத்து தன்னிடம் வாய்ப்பு கேட்க வந்த ஒரு இஸ்லாமிய பெண்ணையும் மடக்கி தன்னுடன் வைத்துக்கொண்டார்.

இவ்வாறு காலையில் ஒரு பெண், இரவில் ஒரு பெண் என வாழ்ந்து வருபவர் தான் தீனா என்று கூறி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளார் பயில்வான் ரங்கநாதர்.

Advertisement

Advertisement