சமீபகாலமாக வெள்ளித்திரையில் உள்ள பிரபலங்கள் இறப்புக்குள்ளாவது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்த வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது முன்னணி நடிகர் ஒருவர் இறந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
அதாவது பாலிவூட் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வந்தவர் தான் ஜித்தேந்திர சாஸ்திரி. பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கினார். குறிப்பான இவரது நடிப்பில் வெளியாகிய ‘பிளாக் பிரைடே’, ‘ராஜ்மா சாவால்’, ‘அசோகா’, ‘இந்தியாஸ் மோஸ்ட்’ உள்ளிட்ட திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன.
வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி வந்த அவர், ‘மிர்சபூர்’ என்ற வெப் தொடர் மூலம் மிகவும் பிரபமானார். 65 வயதாகும் அவர், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று திடீரென மரணமடைந்தார்.
இவரது இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ளதாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். ஜித்தேந்திர சாஸ்திரியின் மரணம் திரைப்படங்கள் மற்றும் ரசிகர்களிடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!