செய்திவாசிப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்து இன்று சினிமா நடிகை, சின்னத்திரை நடிகை மற்றும் யூடியூபர் என பன்முகத் திறமை கொண்ட ஒருவராக மாறியிருப்பவர் பிரியா பிரின்ஸ்.
அதாவது செய்திவாசிப்பாளராக தனது மீடியா வழ்க்கையை ஆரம்பித்த சென்னையை சேர்ந்த பிரியா பிரின்ஸ், விஜய் டிவியில் ஒளிபரப்பான 'இ.எம்.ஐ. தவணை முறை வாழ்க்கை' எனும் சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து 'பசங்க, வானவராயன் வல்லவராயன்' உள்ளிட்ட சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். இருப்பினும் தமிழ் கடவுள் முருகன் சீரியலில் பார்வதியாக நடித்ததன் மூலமே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தனர்.
தற்போது இவருக்கு 16 வயதில் மகள் உள்ளார் என்று சொன்னால், யாருமே நம்ப மாட்டார்கள். ஏனெனில் தற்போதும் அந்தளவிற்கு இளமையாக இருந்து வருகின்றார்.
அதுமட்டுமல்லாது சன் டிவியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் 'கண்ணான கண்ணே' சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பிரியா பிரின்ஸ் பிரம்மாண்டமாக தனது கனவு வீட்டை கட்டி அதன் ஹோம் டூர் வீடியோவை தனது யூடியூப் சேனலிலேயே வெளியிட்டு வியூஸ்களை அள்ளி வருகிறார்.
அதாவது காரில் இருந்து வீட்டுக்குள் நுழைந்து அதனை சுற்றிக் காட்டும் ஹோம் டூர் வீடியோவை வெளியிட்டுள்ள பிரியா பிரின்ஸ் தனது வீட்டுக்காக நெட்பிளிக்ஸில் பிரபலமான ஸ்குவிட் கேம் தீம் கொண்ட சாவியை வாங்கி உள்ளேன் என கூறி அதனைக் காட்டும் போதே பலருக்கும் பகிர் கிளம்புகிறது.
ஆனால் வீட்டுக்குள் சென்று பார்த்தால் காஸ்ட்லி சோபா, ஊஞ்சல் என ஒவ்வொன்றையும் அவர் பார்த்து பார்த்து வாங்கிப் போட்டிருப்பது ரசிகர்களை மலைக்க வைக்கிறது. அதுமட்டுமல்லாது "ப்ரியா வீட்டில் பார் செட்டப்" என்று ரசிகர்களை கவரும் விதமாக டைட்டில் வைத்து அந்த வீடியோவையே அவர் வெளியிட்டுள்ளார். '
அந்தவகையில் கிச்சன் அருகே ராயல் செட்டப்பில் பக்காவாக பெரிய பார் செட்டப்பே பிரியா பிரின்ஸ் வைத்துள்ளதை பார்த்த ரசிகர்கள் "குடியும் குடித்தனமுமாக வாழ்றீங்க பிரியா வாழ்த்துக்கள்" என கமெண்ட் போட்டு அவரை வாழ்த்தி வருகின்றனர்.
Listen News!