பாலிவூட் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய நடிகையாக வலம் வருபவர் தான் மாதுரி தீக்ஷித். ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்த இவர் தற்பொழுது சீனியர் நடிகை ஆகி விட்டாலும் இன்னும் சிறப்பான ரோல்களில் நடித்து வருகின்றார்.
இது தவிர வெப் சீரியல்களில நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.மும்பையில் நடிகை மாதுரி தீக்ஷித் தற்போது மாதம் 12.5 லட்சத்துக்கு சொகுசான வாடகை வீட்டில் தங்கி வருகிறார். 3 ஆண்டுகள் வரை அங்கே அவர் தங்கியிருக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில்,48 கோடி ரூபாய்க்கு மும்பையில் உள்ள ஹைஃபை ஆன இடத்தில் அமைந்துள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் 53வது மாடியில் 5,384 சதுர அடியில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பை விலைக்கு வாங்கி உள்ளார் என்றும் கடந்த செப்டம்பர் மாதம் அதற்கான பத்திரப்பதிவு நடைபெற்றதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
53வது மாடியில் இருந்து பார்த்தால் டோட்டல் மும்பையே செம சூப்பராக தெரியும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து 55 வயதாகும் மாதுரி தீக்ஷித் நடிப்பில் வருகின்றனர்.இவரது நடிப்பில் வெளியான தேஸாப், பிரேம் பிரதிக்யா, தில், சாஜன், பேட்டா, தேவ்தாஸ் உள்ளிட்ட பல படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!