தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் சிறுத்தை சிவா. இவர் 'சிறுத்தை' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. இதன்பின் அஜித்துடன் கைகோர்த்து வீரம், வேதாளம், விஸ்வாசம் என பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அஜித்துடனான கூட்டணியை தொடர்ந்து ரஜினிகாந்துடன் கைகோர்த்து 'அண்ணாத்த' திரைப்படத்தை இயக்கினார்.
இவருடைய தம்பியும் பிரபல நடிகருமானவர் பாலா. இவர் தமிழில் 'அன்பு' படம் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து 'காதல் கிசுகிசு', 'அம்மா அப்பா செல்லம்', 'கலிங்கா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது வீரம் படத்தில் அஜித்குமாரின் தம்பிகளில் ஒருவராக வந்தார். மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.
பாலாவுக்கு 2016-ஆம் ஆண்டு பாடகி அம்ருதாவுடன் திருமணமாகி விவாகரத்தில் முடிந்தது.
பின்னர் டாக்டரான எலிசபெத்தை காதலித்து 2-ஆவது திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் எலிசபெத்தையும் பாலா பிரிந்து விட்டதாகவும், அவரை விவாகரத்து செய்ய இருப்பதாகவும் மலையாள ஊடகங்களில் தகவல் வெளியாகி பரபரப்பானது.
இதற்கு பாலா முகநூலில் நேரலையில் வந்து விளக்கம் ஒன்றினை அளித்தார். அவர் கூறும்போது ''இது நிஜமாகவே வேதனை அளிக்கிறது. திருமணம் ஒருமுறை தோல்வியுற்றால், அதை சிந்திக்காமல் இருக்கலாம். ஆனால் இரண்டாவது முறை தோல்வியுற்றால் யோசிக்க ஆரம்பிக்கிறோம்.
என்னை இந்த நிலைக்குத் தள்ளிய ஊடகங்களுக்கு நன்றி. நீங்கள் வற்புறுத்தினாலும் நான் எலிசபெத்திடம் பேசமாட்டேன். எலிசபெத் என்னை விட சிறந்தவர். தயவு செய்து அவருக்கு கொஞ்சம் ஆவது நிம்மதி கொடுங்கள். நான் மாறிக்கொள்கிறேன். இது என் வாழ்வில் மிகவும் வேதனையான நாட்கள். நான் எனக்காக இப்போது பேச முயற்சிக்கவில்லை" என்று மிகவும் வேதனையுடன் கூறியுள்ளார் பாலா.
இரண்டாவது மனைவியையும் பாலா பிரிந்து இருப்பது ரசிகர்களுக்கு மட்டுமன்றி, திரையுலகில் பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.
Listen News!