வெள்ளித்திரையில் வெளியாகும் திரைப்படங்களை கிண்டலாகவும், கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’. ரஜினி, கமல், விஜய், அஜித் என யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருகின்றார்.
இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.இவர் சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் ஆன்டி இண்டியன் என்ற படத்தின் மூலமாக இயக்குனரானார்.
சமீபத்தில் ரிலீஸான பொன்னியின் செல்வன் படத்திற்கு விமர்சனம் சொன்ன ப்ளூ சட்டை மாறன் முதலில் படத்தை புகழ்ந்து பேசுவது போல பேசிவிட்டு, அதன் பின் படத்தை மோசமாக விமர்சித்து பேசி இருந்தார். மேலும் அது பற்றி தற்போது இயக்குநர் பேரரசு கோபமாக அவரை தாக்கி பேசி உள்ளார்.
ஆன்டி இண்டியன் படத்தின் 2ம் பாகம், 3ம் பாகம் எடுக்க சொல்லுங்க. ஒரு படம் எடுத்து உன்னால வெற்றி கொடுக்க முடியல, அடுத்த படத்தை விமர்சிக்க உனக்கு தகுதியே இல்லை. விமர்சனம் நாகரிகமாக இருக்க வேண்டும். மனதை புண்படுத்தும்படி இருக்க கூடாது.'
"குறைகளை சுட்டிக்காட்டி சிந்திக்க வைங்க. அடுத்த படத்தில் அந்த குறைகள் வராமல் செய்வது தான் விமர்சனம். ஒரேடியாக விமர்சனம் செய்து சாவடிப்பது விமர்சனம் அல்ல.. அது கொலை" என பேரரசு கூறியிருக்கிறார்.
Listen News!