• Feb 03 2026

சமூகத்தில் வேற யாரும் கிடைக்கலையா? கலரான நடிகைக்கு ஏன் மேக்அப்.!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்களுக்குப் பெரும் விவாதங்களை உருவாக்கும் வகையில், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சம்யுக்தா சமீபத்தில் ஒரு முக்கிய கேள்வியை எழுப்பியுள்ளார். சமீபத்திய பேட்டியில், அவர் இயக்குநர் மாரி செல்வராஜின் தேர்வுகளையும் கதாபாத்திர இயக்கத்தையும் குறித்து தனது கருத்துகளைத்  தெரிவித்துள்ளார்.


சம்யுக்தா கேள்வி எழுப்பியதாவது, “இயக்குநர் மாரி செல்வராஜூக்கு சமூகத்தில் வேற யாரும் கிடைக்கலையா? எதற்கு கலரான நடிகையை மேக்அப் போட்டு நடிக்க வைக்கிறீங்க? இதை கேட்டால், ஊனமுற்றவர்கள் கதாபாத்திரத்தில் ஊனமுற்றவர்களை நடிக்க வைக்க முடியுமான்னு மோசமான பதிலை சொல்லுறாரு மாரி செல்வராஜ். அவரால சாதாரண பெண்களைக் கூட நல்லா நடிக்க வைக்க முடியாதா?” என்றார். 

இந்த கேள்வி சமூக வலைத்தளங்களில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்யுக்தாவின் கேள்வி, தமிழ்த் திரையுலகில் நடிப்பின் வாய்ப்புகளைப் பற்றிய ஒரு ஆழமான விவாதத்தை தொடங்கியுள்ளது.


மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவரும் படங்களில், கதாபாத்திரங்களுக்கு விருப்பமான நடிகர்களை தேர்வு செய்வதில் பல நேரங்களில் “கலைஞர்களின் திறமைக்கு மேலான அழகு” அல்லது மேக்அப் போன்ற அம்சங்கள் முன்னுரிமையாகக் கொள்ளப்படுவதாக விமர்சகர்கள் கூறி வருகின்றனர். சம்யுக்தாவின் கேள்வி இதனை நேரடியாக கேள்வி எழுப்பும் வகையில் இருக்கிறது.

Advertisement

Advertisement