• Mar 13 2026

விஜய் இனி யாருடன் வாழப்போகிறார்..? கேள்விக்குறியாகும் காவேரி வாழ்க்கை..! மகாநதி promo.!

shali / 7 months ago

Advertisement

Listen News!

இன்று, வெண்ணிலா ஹோட்டில வந்து தன்னை தள்ளி விட்டது பசுபதி தான் என்ற உண்மையை சொல்லுறார். அதைக் கேட்ட judge விஜயை நிரபராதி என்று சொல்லி அவரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கின்றார். அதைக் கேட்டு விஜய் வீட்டில இருக்கிற எல்லாரும் சந்தோசப்படுகிறார்கள். 


பின் விஜய் வீட்ட வந்து நிக்கிறார். அப்ப தாத்தா காவேரியையும் வீட்டுக்குள்ள வரச்சொல்லுறார். இப்படியாக இன்றைய எபிசொட் இடம்பெறுகிறது. தற்பொழுது நாளைய எபிசொட்டிற்கான promo வெளியாகியுள்ளது. அதில், காவேரி விஜயை வெளியில கொண்டு வாறதுக்கு ஹெல்ப் பண்ணதுக்கு வெண்ணிலாவிற்கு தாங்க்ஸ் சொல்லுறார். 


அதைக் கேட்ட வெண்ணிலா காவேரியைப் பார்த்து நீ தான் உன்ர வயித்தில வளருற குழந்தை மேல கை வைச்சு சத்தியம் பண்ணி சொன்ன அதுக்கப்புறமும் நான் உன்னை நம்பாம இருக்க முடியுமா என்று கேட்கிறார். மேலும் நீ எனக்கு சத்தியம் பண்ண மாதிரி விஜயை எனக்கே கொடுப்பியா என்று கேட்கிறார். 

Advertisement

Advertisement