• May 08 2024

வெற்றி தோல்வியை தீர்மானிக்க நீங்க யாரு ? ப்ளூ சட்டை, பயில்வனை கிழித்து தொங்க விட்ட பிரபல நடிகை!!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

முன்னைய காலத்தில் திரையரங்கத்திற்கு ஒரு படம் வந்து அதை மக்கள் பார்த்து விட்டு படத்தில் நல்ல விசயங்கள் மாற்ற வேண்டியவைகள் பற்றி விவாதம் செய்வார்கள். ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் படம் திரையரங்கிற்கு வர முதலேயே இணையத்தில் படத்தை பற்றி பேச ஆரம்பித்து விடுகிறார்கள். இதனால் சில படங்கள் நன்றாக இருந்தும் சிலரது இணைய செய்திகளில் படத்தை பற்றி தவறான கருத்துக்களை பதிவிட்டு அந்த படம் தோல்வி அடைந்தும் இருக்கிறது.

இந்நிலையில் அதிகமான ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறன் மற்றும் பயில்வான் போன்ற பிரபலங்களின் விமர்சனத்தை பார்த்து விட்டு தான் திரையரங்குகளுக்கு செல்கிறார்கள். இவர்களுக்கு சினிமா வட்டாரத்தில் கடுமையான எதிர்ப்பு இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருக்கிறது. 

இவ்வாறு இருக்கையில் சரத்குமாரின் வாரிசான வரலட்சுமி சரத்குமார் தற்போது படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கன்னடத்தில் வெளியான கரால ராத்திரி என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் கொன்றால் பாவம் என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் சந்தோஷ் பிரதாப் மற்றும் வரலட்சுமி நடித்துள்ளனர்.

கொன்றால் பாவம் படம் வருகின்ற கோடை விடுமுறைக்கு வெளியாக உள்ள நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு படக்குழு பேட்டி கொடுத்திருந்தது. இதில் பேசிய வரலட்சுமி சரத்குமார் சினிமா விமர்சகர்களை கிழித்து தொங்கவிட்டு உள்ளார். அதாவது ஒரு படம் வெளியான பின்பு 5 அல்லது 6 நாட்கள் கழித்து விமர்சனம் சொல்லலாம்.

ஆனால் படம் வெளியான உடனே மோசமாக விமர்சனம் செய்து படத்தை ஓட விடாமல் செய்து விடுகிறார்கள். ஒரு படம் வெளியாவதில் பல பேரின் கடின உழைப்பு இருக்கிறது. அதுமட்டுமின்றி ஒரு படம் வெற்றி அல்லது தோல்வி என்று சொல்ல இவர்கள் யாரு. பத்து பேரு படத்தை பார்த்தா எட்டு பேருக்கு பிடிக்கும் இரண்டு பேருக்கு பிடிக்காது.

அப்படி இருக்கையில் உங்களது கருத்துக்களை வந்து பரப்பி படத்தை ஓடாமல் செய்து விடுவது மிகவும் தவறானது. இதனால் பல படங்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளது என சூசகமாக ப்ளூ சட்டை மாறன் மற்றும் பயில்வான் போன்ற சினிமா விமர்சனகர்களை நடிகை வரலட்சுமி வம்புக்கு இழத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement