• May 04 2024

வைரமுத்துவுடன் என்ன பிரச்சனை: முதன்முறையாக உண்மையை உடைத்த மணிரத்னம்.!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

'பொன்னியின் செல்வன்' படத்தில் வைரமுத்துவுக்கு வாய்ப்பளிக்காதது குறித்து விளக்கமளித்துள்ளார் இயக்குநர் மணிரத்னம்.

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தை இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறது என்று தான் கூற வேண்டும். எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புகழ்பெற்ற நாவலான 'பொன்னியின் செல்வன்' கதை அதே பெயரில் படமாக உருவாகி  திரையரங்குகளில் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ள 'பொன்னியன் செல்வன்' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது.மேலும்  இந்தப்படத்தை பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.

மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும், லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளாராம். அண்மையில் இந்தப்படத்தின் படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக பல நட்ச்சத்திரங்கள் கலந்து கொண்டு நடைபெற்றது. தற்போது படத்தின் புரோமோஷன் பணிகள் படுஜோராக நடைபெற்று வருகின்றது.

'பொன்னியின் செல்வன்' படத்தில் வைரமுத்து இல்லாதது ஆரம்பத்தில் இருந்தே மிகப்பெரிய அளவில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது.  மணிரத்னம், வைரமுத்து இடையே என்ன பிரச்சனை. பல வெற்றி படங்களை கொடுத்த இந்த கூட்டணி, இந்தப்படத்தில் இணையாதது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இவ்வாறுஇருக்கையில்  இந்த விவகாரம் குறித்து முதன்முறையாக பதிலளித்துள்ள மணிரத்னம், ரோஜா படத்தில் இருந்து அவர் எங்களுடன் பயணித்துக்கொண்டிருந்தார்.

எங்களின் கூட்டணியில் பெரிய ஹிட் பாடல்கள் வெளியாகியுள்ளன. அதே சமயம் தமிழில் வைரமுத்துவைபோல் பல கவிஞர்கள் உள்ளனர்.மேலும்  அவரை விட திறமையாளர்களும் உள்ளனர். புதிய கலைஞர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டுமென்பதால் இந்த படத்தில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். வைரமுத்துவை விட பல திறமையானவர்கள் இருக்கிறார்கள் என மணிரத்னம் தெரிவித்துள்ளதை நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement