• May 18 2024

என்னது..ஐந்தாண்டுகள் சிறை தண்டனையா? - லியோ படத்திற்கு பசுமை தாயகம் அமைப்பு எடுத்த அதிரடி முடிவு..!

Jo / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தில் பெரும்பாலான காட்சிகள் முடிவடைந்துள்ளது. இந்தநிலையில் அந்த படத்தின்  First Look காட்சிகளை வெளியிடப்பட்டுள்ளது. அதில் விஜய் சிகிரெட் பிடிப்பது போல் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பசுமை தாயகம் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில். சிகரெட் நிறுவனங்கள் அவர்களின் வாடிக்கையாளர்களையே கொலை செய்கின்றன.

அந்த இழப்பை ஈடு செய்யும் நோக்கில், இளம்வயதினரை புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக்குவதற்காக, சினிமா ஹீரோக்களை புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்கச் செய்கின்றனர். விளம்பரங்களிலும் சுவரொட்டிகளிலும் கதாநாயகன் புகைபிடிக்கும் காட்சிகளை விளம்பரம் செய்கின்றனர். இவ்வாறு விளம்பரம் செய்வது COTPA 2003 இந்திய புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தின் படி குற்றம் என்று தெரிந்தே இந்த விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன.

நடிகர் விஜய் நடிக்கும் "லியோ" (LEO) திரைப்படத்தின் First Look விளம்பரத்தில் புகைபிடிக்கும் காட்சியினை தற்போது ட்டமிட்டு இடம்பெறச் செய்துள்ளனர். இதை இன்னும் சில நாட்களில் நடிகர் விஜய் நீக்குவார் என தெரிவித்துள்ளது. 

 ஆனால், 24 மணி நேரத்தில் அந்த பர்ஸ்ட் லுக் புகைபிடிக்கும் காட்சியை சுமார் 73 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இவர்களில் பல்லாயிரக்கணக்கானோர் குழந்தைகளாக இருப்பார்கள்... அவர்களில் பலர் புகையிலை பொருட்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். அந்தக் கொடுமைக்கு நடிகர் விஜய் ஒரு முக்கிய காரணமாக இருப்பார்.

குறிப்பு: COTPA 2003 இந்திய புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ் குற்றச்செயலில் முதல்முறை ஈடுபடுபவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையும், அதே குற்றத்தை மீண்டும் செய்தால் 5 ஆண்டு தண்டனையும் அளிக்க வழிசெய்யப்பட்டுள்ளதாக பசுமை தாயகம் அமைப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement