• May 07 2024

பாக்கியா பெயரிற்கு மாறிய வீடு... நடு ரோட்டுக்குத் துரத்தப்பட்ட கோபி... அதிர்ச்சியில் ராதிகா... இனி நடக்கப் போவது என்ன..?

Prema / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


அதில் கோபியை வீட்டை பாக்கியா பெயரிற்கு மாற்றித் தருமாறு கூறி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர். அங்கு பதிவாளர் கோபி, பாக்கியா இருவருடைய ஆதாரங்களையும் வாங்கிப் பார்க்கின்றார். பின்னர் கோபியிடம் கையெழுத்தை வாங்கிவிட்டு பாக்கியா  பேருக்கு வீட்டை மாற்றிக் கொடுக்கின்றனர்.

இதனையடுத்து எழில் கோபியிடம் "உங்களுக்கும், அந்த வீட்டிற்கும் இருந்த எல்லா உறவும் முடிஞ்சுது, இனிமேல் தயவு செய்து அந்த வீட்டுப் பக்கம் வந்திடாதீங்க" எனக் கூறுகின்றார். 


மறுபுறம் 'பாக்கியலட்சுமி இல்லம்' என்ற பெயரிற்கு அந்த வீடு மாறுகின்றது, இதனைப் பார்த்து கோபி அதிர்ச்சியடைகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. 


Advertisement

Advertisement

Advertisement