• May 18 2024

உஷாவுக்காக பொன்னி செய்த காரியம்- கதறி அழும் சண்முகம்- சுவாரஸியமான பொன்னி சீரியல் ப்ரோமோ

stella / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சீரியல் தான் பொன்னி. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.  இந்த சீரியலில் தற்பொழுது ஷக்தி ப்ரீத்தியைக் காதலித்து வந்தார்.இருப்பினும் ஷக்தியை ப்ரீத்தி திருமணம் செய்ய மறுத்ததால் பொன்னி மாமாவின் பேச்சைக் கேட்டு ஷக்தியைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஆனால் ஷக்தி பொன்னி மீது கடும் கோபத்தில் இருக்கின்றார்.இருந்தாலும் ஷக்தியின் அப்பா பொன்னியையும் ஷக்தியையும் எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கின்றார்.


மறுபுறம் பொன்னியை ஷக்தியிடம் இருந்து பிரித்தே தீருவேன் என வெண்ணிலாவும் அவரது அப்பாவும் புதுப்புது பிளான் போட்டு வருகின்றார்கள்.இந்த நிலையில் பொன்னி ஷக்தியின் குடும்பத்துடன் கிராமத்திற்குச் சென்றுள்ளார்.

இப்படியான நிலையில் ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பொன்னி மரத்தில் தொட்டில் கட்டுகின்றார். இதைப் பார்த்த வெண்ணிலா நக்கலடிக்கின்றார். இந்த நிலையில் அங்குவரும் ஷக்தியின் அண்ணா சண்முகம் வெண்ணிலாவையும் உஷாவையும் அனுப்பி விட்டு பொன்னியிடம் சென்று அவரையும் அனுப்பி விடுகின்றார்.

பின்னர் அவர் போன் பேசிட்டு இருக்கும் போது பொன்னி தொட்டில் கட்டியதில் இருந்து ஒரு கடதாசிதுண்டு விழுகின்றது. அதை எடுத்து படித்த போது அதில் சண்முகம் மாமாவுக்கும் உஷா அக்காவுக்கும் குழந்தை பிறக்க வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது. இதைப் பார்த்த சண்முகம் அழுகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement