• Apr 28 2024

அப்பாவுக்கு தெரியாமல் ஜேசன் சஞ்சய் செய்த காரியம்- லைகா நிறுவனத்தின் மீது கடும் கோபத்தில் இருக்கும் விஜய்

stella / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குபவர் தான் நடிகர் விஜய். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. இதனை அடுத்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.இதற்காக தற்பொழுது வெளிநாட்டுக் சென்றுள்ளார்.

இப்படியான நிலையில் இவருடைய மகனான ஹீரோவாக ஜேசன் சஞ்சய் அறிமுகமாவார் என்று எதிர்பார்த்த நிலையில் லைகா நிறுவனத்தில் தயாரிப்பில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக அண்மையில் லைகா நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது.


சஞ்சயை பல இயக்குநர்கள் நடிகராக்க வேண்டும் என்று முயற்சித்தார்கள்., ஏஆர் முருகதாஸ் போன்ற பல முன்னணி இயக்குநர்கள் கூட சஞ்சயிடம் கதை சொன்னார்கள். ஆனால், எனக்கு நடிகராகும் விருப்பம் இல்லை, இயக்குநராவது தான் தனது விருப்பம் என்று, அந்த இளம் வயதிலும் உறுதியாக இருந்துள்ளார். அது மட்டுமில்லாமல் பல வெற்றிப்படங்களை கொடுத்த எஸ்.ஏ. சந்திர சேகரின் பேரன் என்பதால்,சஞ்சய் நிச்சயமாக தளபதிக்கே சவால் விடும் வகையில் இயக்குநராக வெற்றி பெறுவார்.

லைகா மூலம் மகன் படம் இயக்கப்போவது விஜய்க்கே தெரியாது என்கிற தகவல் பரவி வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. மேலும், விஜய் மனைவி சங்கீதாவின் அப்பா ஒரு ஈழத் தமிழர், லைகா சுபாஷ்கரனும் ஈழத் தமிழர். இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், விஜய் மகன் சஞ்சய்க்கு இந்த வாய்ப்பை லைகா கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

கத்தி படத்திற்கு பின் விஜய் லைக்காவிற்கு கால்ஷீட் கொடுக்கவில்லை. விஜய்யின் கால்ஷீட்டிற்காக பல வருடங்களாக லைகா காத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், அவருக்கே தெரியாமல் லைகா இப்படி மகனுக்கு வாய்ப்பு கொடுத்திருப்பதால் விஜய் லைகா நிறுவனத்தின் மீது கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement