• May 05 2024

இர்பானை விட்டுப் பிரிந்த தந்தை... பேசாமல் இருப்பதற்கு காரணம் என்ன..? முதன் முறையாக அவரே பகிர்ந்த உண்மை..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக சினிமா பிரபலங்களுக்கு இணையாக யூடியூப் பிரபலங்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றர். அந்த வகையில் யூடியூப் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒருவர் தான் இர்பான். இவர் 'இர்பான்ஸ் வியூ' என்ற யூடியூப் சேனலை சொந்தமாக ஆரம்பித்து 6வருடங்களாக அதில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றார். 


இந்த சேனல் ஆரம்பத்தில் சினிமா விமர்சனங்களை செய்து வந்த அவர், அதற்கு ரசிகர்களிடமிருந்து அதிக வரவேற்பு கிடைக்காததால், பல்வேறு ஊர்களுக்கு சென்று அங்குள்ள உணவுகளை சுவைத்து, அதனை வீடியோவாக வெளியிட தொடங்கினார். இந்த வீடியோக்களுக்கு வரவேற்பு கிடைக்கத் தொடங்கியதால், அதனை பின்பற்றி தொடர்ந்து பல்வேறு வெளிமாநிலங்களுக்கும் மற்றும் வெளிநாடுகளுக்கும் சென்று அங்குள்ள உணவுமுறைகளை பற்றியும் விதவிதமான உணவுகளை சுவைத்தும் வீடியோ வெளியிட்டு அதன் மூலமாக பிரபலமானார்.

அந்தவகையில் இவருக்கு யூடியூப்பில் 35 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். மேலும் சமீபத்தில் இவருக்குத் திருமணம் ஆனது. இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள தனது 2ஆயிரமாவது வீடியோவில் ரசிகர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரின் கேள்விகளுக்கு பதிலளித்து இருக்கின்றார்.


அந்த வீடியோவில் முதன்முறையாக தன் தந்தை குறித்தும் வெளிப்படையாக பல விடயங்களை பகிர்ந்திருக்கின்றார் இர்பான். அந்தவகையில் அவர் கூறுகையில், தன்னுடைய தந்தையை வீடியோவில் பார்த்திருக்க முடியாது எனவும், ஆரம்பத்தில் தான் யூடியூப் வீடியோ பண்ணுவது தனது தந்தைக்கு பிடிக்கவில்லை என்பதனால் இதுபற்றி அவர் எதுவும் பேசமாட்டார் எனத் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது தன்னிடம் பேசினாலும் தன் தந்தை கோபப்பட்டு தான் பேசுவார் எனவும், தான் யூடியுப் பண்ணுவதில் அவருக்குவிருப்பம் இல்லை எனவும், வீட்டுக்கே தெரியாமல் தான் யூடியூப்பில் வீடியோ பதிவிட்டமையினால் தனது பெற்றோர்க்கு இடையே சண்டை கூட இடம்பெற்றதாகவும் இர்பான் தெரிவித்துள்ளார்.

மேலும் இர்பான் கூறுகையில், இப்போது தனது தந்தையிடம் பேசுவதாகவும், அவருக்கு வேறு சில கோபங்கள், பிரச்சனைகள் இருப்பதாகவும், இதுவரை காலமும் அப்பா பற்றி வீடியோ போட முடியாம ஆனதற்கு காரணம்  அவர் பற்றி பேசினால் அவர் கோபப்பட்டுவிடுவாரோனு பயத்துல தான் நான் பேசல" எனவும் தெரிவித்துள்ளார். 

அத்தோடு தற்போது தனது அப்பா, அம்மா தனித்தனியாக பிரிந்து இருப்பதாகவும் , தனது தந்தைக்கு பிடிக்காத விஷயங்கள் பற்றி தான் பேசுவதில்லை எனவும், தனது தந்தை மேல் தனக்கு எப்போதுமே மரியாதை இருக்கும் எனவும், என்னை வளர்த்து படிக்க வைச்சது எல்லாமே அவர் தான் எனவும் தனது தந்தை குறித்துப் பல விடயங்களை பகிர்ந்துள்ளார் இர்பான். 

Advertisement

Advertisement

Advertisement