• May 18 2024

வசமாக மாட்டிய ஆதி... உண்மை முகத்தை அறிந்து கொண்ட ஒட்டு மொத்த குடும்பம்.. இனி நடக்கப் போவது என்ன..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல சேனல்களில் ஒன்றாகிய விஜய் டீவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் ஹிட் சீரியல்களில் ஒன்றுதான் 'ராஜா ராணி 2'. அதாவது 'ராஜா ராணி 1' மிகப்பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகமாக ராஜா ராணி சீசன் 2 எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தொடரானது தற்போது விறுவிறுப்பான பல கட்டங்களுடன் நகர்ந்து செல்கின்றது.

மேலும் இந்த தொடரானது ஹிந்தியில் ஒளிபரப்பாகி தமிழில் ரீமேக் செய்யப்பட்ட 'என் கணவன் என் தோழன்' என்ற நாடகத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒன்றாகும்.

இந்த சீரியலின் கதையானது போலீஸ் அதிகாரியாக ஆசைப்படும் மருமகளுக்கு அவருடைய மாமியார் தடையாக இருக்கிறார். எனினும் தனது மனைவியை எப்படியாவது போலீஸ் அதிகாரியாக ஆக்கிவிட வேண்டும் என்று விடாப்பிடியாக முயற்சிக்கிறார் கணவர்.

இந்நிலையில் தனது தாயின் எதிர்ப்பையும் மீறி தனது மனைவியை கணவன் சரவணன் போலீஸ் அதிகாரி ஆக்குகிறாரா? இல்லையா? என்பதை மையமாகக் கொண்டுதான் இந்த நாடகத்தின் கதை அமைந்திருக்கின்றது.

அத்தோடு இந்த நாடகத்தில் சரவணன் கதாபாத்திரத்தில் நடிகர் சித்தும், சந்தியா கதாபாத்திரத்தில் நடிகை ரியா விஸ்வநாதனும் நடித்து வருகின்றனர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். எனினும் ஆரம்பத்தில் சந்தியாவாக நடிகை ஆல்யா மானசா நடித்து வந்தார். பின்னர் அவர் இரண்டாவதுகுழந்தையின் பிரசவத்திற்காக நாடகத்தை விட்டு விலக நேர்ந்தது. 


இவ்வாறான இந்தத் தொடரில் தற்போது அர்ச்சனாவிற்கு வளைகாப்பு நடப்பது காட்டப்படுகிறது. சரவணன் தம்பி ஆதியும், ஜெஸ்ஸியும் காதலித்து வந்தனர். அவர்கள் இருவரும் நெருங்கி பழகியதால் ஜெஸ்ஸி கர்ப்பமாக இருக்கிறார்.

ஆனால் கதையின் திருப்பமாக அர்ச்சனா வளைகாப்பிற்கு மேக்கப் போட வருகிறார் ஜெஸ்ஸி. அங்கு ஜெஸ்ஸி மயங்கி விழ அவர் கர்ப்பத்திற்கு காரணம் ஆதி தான் என்று அனைவரும் முன்பும் போட்டு உடைத்து விடுகிறார்.

இவ்வாறான விறுவிறுப்புக்களுடன் நகர்ந்து செல்கின்ற இந்தத் தொடரின் மற்றுமோர் ப்ரமோ தற்போது வெளியாகி இருக்கின்றது. அப்ரோமோவில் ஆதிக்கு வேறு திருமணம் செய்ய குடும்பத்தினர் அனைவரும் திட்டமிட்டுள்ளனர்.

அத்தோடு ஆதியை பெண் பார்க்க செல்ல அழைத்து செல்கின்றனர். அங்கு பெண் பார்க்க செல்லும் ஆதியிடம் அந்த பெண் உங்களிடம் தனியாக பேச வேண்டும் என்று கூறி அவரை அழைத்து செல்கிறார். 

எனினும் ஆதி உள்ளே சென்றதும் அங்கே யாருமே எதிர்பார்க்காத வண்ணம் ஜெஸ்ஸி இருக்கிறார். அதனைத் தொடர்ந்து ஜெஸ்ஸியிடம் நீ கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அவசரப்பட்டு கூறவில்லை என்றால், நான் என் அம்மாவிடம் பேசி இந்த காரியத்தை மிகவும் சுலபமாக முடித்து இருப்பேன் என்று ஆதி கூறுகிறார். இதனை வெளியில் இருந்து அவர்களின் ஒட்டுமொத்த குடும்பமே கேட்டு விடுகிறது. 


இவ்வாறாக விறுவிறுப்புக்கள், மற்றும் திருப்பங்கள் நிறைந்த வகையில் இந்த ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. 

Advertisement

Advertisement