• May 07 2024

திடீர் மரணமடைந்த வனிதாவின் 3ஆவது கணவர் வீட்டில் கட்டுக் கட்டாக கிடந்த பணம்... வெளிவரும் மர்மம்... நடந்தது என்ன..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை வனிதா ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் செய்து அவர்களுடனான கருது வேறுபாடுகளின் காரணமாக பிரிந்து பின்னர் மூன்றாவதாக பீட்டர் பால் என்ற கிராபிக்ஸ் டிசைனர் இயக்குநரை காதலித்து கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். 


இருப்பினும் இந்த திருமணமும் வனிதாவுக்கு கை கொடுக்கவில்லை. அதாவது இவர்கள் திருமணம் செய்து கொண்ட ஒரு சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். குறிப்பாக இவர்களின் பிரிவுக்கு பீட்டர் பாலின் குடிப்பழக்கமே காரணமாக இருந்தது. இதனையடுத்து சமீபத்தில் பீட்டர் பால் இறந்திருந்தார். இந்த விடயமானது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் தற்போது பீட்டர் பால் வீட்டிலிருந்து கட்டு கட்டாக பணங்கள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அவர் தனது குடும்பத்திற்காக சொத்துக்களை சேர்த்து வைத்திருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. அந்தவகையில் இவர் ஒரு சிறந்த visual effect director என்பது நம் அனைவருக்குமே தெரியும். இவர் சிறந்த கடின உழைப்பும், விடாமுயற்சியும் கொண்ட ஒருவராக இருந்து வந்திருக்கின்றார். 


மேலும் வனிதாவின் யூடியூப் சேனலை இம்ப்ரூவ் பண்ணுவதற்காகவே வனிதாவின் வாழ்க்கையிலும் நுழைந்திருக்கின்றார். இவ்வாறு பெரிய ஒரு visual effect director ஆக இருந்த இவருக்கு கண்டிப்பாக லட்ஷம் லட்ஷமாக நிறைய பணம் கிடைத்திருக்கும். அது மட்டுமல்லாது இவர் நிறையப்பேருடன் இணைந்து பணியாற்றியும் இருக்கின்றார்.

அதற்கான ஊதியம் கண்டிப்பாக அவருக்கு கிடைத்திருக்கும். அந்த ஊதியம் எல்லாவற்றையுமே அவர் வீட்டில் தான் வைத்து வந்திருக்கின்றார். இந்நிலையில் இவர் தனது கடைசி நேரத்தில் அதாவது இறப்பதற்கு முன்னர் தனது முதல் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் ஒரு சில சொத்துக்களை எழுதி வைத்திருக்கின்றார். மேலும் அவர்களுக்கு கடைசிக் காலத்தில் உதவும் வகையில் பணமும் சேர்த்து வைத்திருக்கின்றார்.  


இந்த பணம் எல்லாவற்றையும் தற்போது அவரின் வீட்டில் உள்ளவர்கள் கண்டெடுத்து இருக்கின்றார்கள். அதுமட்டுமல்லாது இவ்வளவு பணத்தை தனது குடும்பத்திற்காக சேர்த்து வைத்துள்ளாரா என்ற ஆச்சரியத்திலும் மூழ்கி உள்ளனர். 

கடின உழைப்பாளியாக இருந்த போதிலும், குடிபோதைக்கு அடிமையானது தான் இவரின் இறப்பிற்கு காரணம். இந்நிலையில் இப்பணம் குறித்துப் பல கேள்விகளும் எழுந்துள்ளது. அதாவது பீட்டர் பால் தனது கடைசிக் காலத்தில் தனியாகவே இருந்திருக்கார். அப்படி இருக்கும் போது வீட்டிற்காக எதற்கு இவ்வளவு பணம் சேர்த்து வைத்துள்ளார் எனப் பலரும் கேட்டு வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் அவர் முதல் மனைவி கொண்ட பாசம் தான் எனக் கூறப்படுகின்றது. ஏனெனில் அவரை குடியை மறக்குமாறு மனைவி கூறியதாக நிறைய இடங்களில் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement