• May 05 2024

“அஜித் சொன்னது.. மறக்கவே முடியாது..” விஜய் அம்மா ஷோபா கூறிய தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இன்று ரசிகர்கள் பலரும் கொண்டாடும் விஜய்யின் வாரிசு திரைப்படம் வெளியாகி உள்ளது.இப்படத்தை இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார்.விஜய்யுடன் முதன் முறையாக வாரிசு படத்தில் இணைந்து நடித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. இப்படத்தில் பிரபு  பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இவ்வாறுஇருக்கையில்  இதேபோல, அஜித் குமார் நடிப்பில் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  இன்று வெளியாகி உள்ளது.

நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பின்னர் மூன்றாவது முறையாக இயக்குனர்  எச். வினோத்துடன் துணிவு திரைப்படம் மூலம் இணைந்துள்ளார் நடிகர் அஜித். அதே போல, இந்த மூன்று படங்களையும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கென், வீரா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகின்றார். இந்த படத்தின் கலை இயக்குநராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌. எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார். மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் துணிவு படம் வெளியாகி வரவேற்பை பெற்றுகிறது.

அஜித் மற்றும் விஐய் என இரண்டு பெரிய நட்சத்திரங்களின் திரைப்படம் பொங்கல் பண்டிகையின் போது ரிலீஸ் ஆகி உள்ளதால் இருவரின் ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.எனினும் இதற்கு முன்பு விஜய்யின் ஜில்லா மற்றும் அஜித்தின் வீரம் ஆகிய திரைப்படங்கள், கடந்த 2014 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ரிலீஸ் ஆகி உள்ளது

இவ்வாறுஇருக்கையில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பிரத்தியேக பேட்டி அளித்த நடிகர் விஜய்யின் அம்மா, ஷோபா சந்திரசேகர், “குஷி ஆடியோ லாஞ்ச்க்கு அஜித் வந்துருந்தாரு.. அது எங்க நடந்ததுனு தெரியல. அப்போது அஜித் மைக்லயே Open ஆக சொல்லியிருந்தார். ராஜாவின் பார்வையிலே படத்தின்போது விஜய்க்கு சாப்பாடு செய்து அனுப்பும்போது அஜித்துக்கும் செய்து கொடுத்து அனுப்பியதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அத்தோடு எனக்கும் அது சொல்ல முடியாத சந்தோஷம். அதையெல்லாம் ஏன்ப்பா சொல்ற என கேட்டேன். அவரோ, அது தனக்கு அதை மறக்கவே முடியாது.” என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement