• May 19 2024

16 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்திருக்கின்றோம் தவறாக பேச எதுவும் இல்லை- கவலை தெரிவித்த பிரகாஷ் ராஜின் முதல் மனைவி

stella / 10 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் குணச்சித்திர வேடங்களிலும் வில்லன் கதாப்பாத்திரங்களிலும் நடித்து வரும் முக்கிய நடிகர் தான் பிரகாஜ் ராஜ். இவர் நடிகை லலிதா குமாரியை கடந்த 1994ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். லலிதா குமாரி மனதில் உறுதி வேண்டும், மாப்பிள்ளை, புலன் விசாரணை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

நடிகர் பிரகாஷ் ராஜும், லலிதா குமாரியும் திருமணமாகி 16 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தனர். அதன் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் கடந்த 2009ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. அதன் பின்னர் நடிகர் பிரகாஷ் ராஜ் போனி வர்மா என்ற நடன இயக்குநரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.


இந்நிலையில் பொதுவாகவே விவாகரத்தானபிறகு முன்னாள் கணவரை பற்றி குறை சொல்லி, பிரச்சனை செய்யும் பெண்கள் பலரை நாம் பார்த்திருக்கிறோம். அதிலும் குறிப்பாக சினிமா பிரபலங்கள் என்றால், மாத்தி மாத்தி தரக்குறைவாக பேசி, பேட்டி கொடுப்பது தான் வழக்கம். அப்படிப்பட்டவர்களுக்கு மத்தயில் நடிகர் பிரகாஷ் ராஜின் முன்னாள் மனைவி லலிதா குமாரி, ஒரு பேட்டியில் அவரை புகழ்ந்து தள்ளியுள்ளார் என்றே கூறலாம். அந்த பேட்டியில்  நாங்கள் இருவரும் பிரிந்துவிட்டோமே தவிர, என் குழந்தைகளுக்கு தந்தை அவர்தான். 


இந்த விஷயத்தில் என்னை விட அவர் மிக தெளிவாக இருக்கிறார். இன்று வரை குழந்தைகளுக்கு வேண்டிய அனைத்தையும் மிக சரியாக செய்து வருகிறார் என்று கூறியுள்ளார் லலிதா குமாரி. மேலும் இப்போது நாங்கள் பிரிந்து விட்டாலும் 16 வருடங்கள் நாங்கள் மகிழ்ச்சியாக ஒற்றுமையாக வாழ்ந்தது உண்மை. அதனால் நான் அவரை பற்றி எப்போதும் தவறாக பேச மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement