• Oct 22 2024

இனிமேல் விஷால் திரைப்படங்களில் நடிக்க மாட்டாரா? ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் முடிவு..!

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஷால் அடுத்தடுத்த படங்களுக்கு ஆர்வமாக கதை கேட்டுக் கொண்டிருந்த நிலையில் திடீரென கதை கேட்பதை நிறுத்தி விட்டதாகவும் இப்போதைக்கு எந்த படமும் வேண்டாம் என்று முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த ’ரத்னம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தை விஷால் மிகப்பெரிய அளவில் நம்பி இருந்தார். ’மார்க் ஆண்டனி’ திரைப்படம் நல்ல வெற்றி பெற்றதை அடுத்து, தொடர் வெற்றிக்காக அவர் காத்திருந்த நிலையில் தான் அந்த படம் அவர் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யவில்லை. மேலும் தயாரிப்பாளருக்கு சில கோடிகள் நஷ்டம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுக்க வேண்டும் என்பதற்காக அவர் கதையை கவனமாக தேர்வு செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இப்போதைக்கு ‘துப்பறிவாளன் 2’ படத்தை முடிக்க முடிவு செய்திருக்கும் விஷால், அந்த படத்தை முடிக்கும் வரை எந்த புதிய படத்திலும் கமிட்டாக வேண்டாம் என்று திட்டமிட்டுள்ளதாகவும் அதனால்தான் கதை கேட்கும் படலத்தையும் அவர் நிறுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

‘துப்பறிவாளன் 2’ படத்தை முடித்துவிட்டு அவர் தனக்கு நெருக்கமான சில இயக்குனர்கள் மற்றும் நண்பர்களை வைத்துக் கொண்டுதான் இயக்குனர்களிடம் கதை கேட்க இருப்பதாகவும் அனைவருக்கும் கதை திருப்தி இருந்தால் மட்டுமே அந்த கதையை தேர்வு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் தினந்தோறும் அவரது வீட்டிற்கு கதை சொல்ல வந்த இயக்குனர்கள் தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் ஆறு மாதம் கழித்து வாருங்கள் என அவர்களுக்கு பதில் சொல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது.

Advertisement