• Apr 28 2024

சினிமா மீது கொண்ட காதலால் மனைவியை பிரிந்த விஷால் பட இயக்குநர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 2006ஆம் ஆண்டு நரேன் நடிப்பில் வெளியான சித்திரம் பேசுதடி என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் இயக்குநர் மிஸ்கின் . இவர் இயக்குநர் மட்டுமன்றி நடிகரும் ஆவார்.

அஞ்சாதே,நந்தலாலா,துப்பறிவாளன், பிசாசு, சைக்கோ என பல வித்தியாசமான கதைக்களத்தில் வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் மிஸ்கின் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகவும் வலம்வருகின்றார் .

இந்நிலையில் இயக்குநர் மிஸ்கின் தனது மனைவியை பிரிந்ததற்கான காரணத்தை பிரத்தியேக ஊடகம் ஒன்றில் கூறியுள்ளார் . இவருக்கு திருமணமாகி பெண் குழந்தையும் உள்ளது . 10 வருடங்கள் கடந்த நிலையில் இருவரும் ஒரு மனமாக பேசி பிரிந்துள்ளோம் என்று கூறினார் .

அதன்படி, அவர் தனது மனைவியை பிரிவதற்கு முக்கிய காரணமாக இருந்தது சினிமா தான் என தெரிவித்துள்ளார்.சினிமா மீது கொண்ட தீராத காதலினால் குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க முடியாதுள்ளது . எனவே இருவரின் விருப்பத்துடனும் பிரிந்துள்ளோம் என்று கூறினார்

Advertisement

Advertisement

Advertisement