பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போதுள்ள போட்டியாளர்களில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் என்றால் அது ஜிபி முத்து தான்.அவர் தான் இப்போது பிக் பாஸில் நம்பர் 1 போட்டியாளர் என Ormax வெளியிட்ட ரேட்டிங்கிலும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அத்தோடு ரசிகர்களும் ஜிபி முத்து அப்பாவித்தனமாக செய்யும் ஒவ்வொரு விஷயங்களையும் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.அத்தோடு ட்விட்டரில் அவருக்கு தான் அதிகம் ஆதரவும் உண்டு.
இவ்வாறுஇருக்கையில் தன்னை வெளியில் அனுப்பிவிடும்படி ஜிபி முத்து இரண்டு நாளாக கேட்டுக்கொண்டு இருக்கிறார்.அதாவது தான் எனது குடும்பத்தை பார்க்க வேண்டும் என்பதே அவரது முதல் வேண்டுகோளாக உள்ளது.
இவ்வாறு அவர் ஒவ்வொரு கேமரா முன் நின்று பேசிய நிலையில் பிக்பாஸ் அவருக்கு அறிவுரை சொல்லி பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்க சொல்கிறார்.இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருக்கிறாராம்.
இதைப் பார்த்த விக்ரமன் ஓ உண்ணாவிரமா என கேட்க ஜி.பி.முத்து நான் என்ன செய்தா உங்களுக்கு என்ன ஏதாவது சொல்லிட்டு இருக்காமா உங்க வேலையை பாருங்க என கோபமாய் திட்டி விடுகிறார்..இந்த விடயம் ரசிகர்கள் மத்தியில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Listen News!