• May 04 2024

கார்த்தியின் கதாப்பாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நம்ம விஜய்- கெத்தாக பேசிய விக்ரம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் நாளை திரைக்கு வரவுள்ளது. படம் குறித்த ஏகபோக எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.இதனால் இப்படத்தின் ப்ரமோஷன் பணிக்காக படக்குழுவினர் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சென்று வந்தனர்.

சோழ மன்னர்களின் வரலாற்றை, புனைந்து எழுதப்பட்ட நாவலான கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியொன்றில் சீயான் விக்ரம் விஜய் பொன்னியின் செல்வனில் நடிக்கவிருந்தது குறித்து பேசியிருக்கிறார்.


அதன்படி அவர் பேசியபோது கார்த்தி தற்போது நடித்துள்ள வந்தியதேவன் கதாபாத்திரத்தில் முதல் நடிக்கவிருந்தது விஜய், ஜெயம் ரவி நடித்த அருண்மொழி கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்க வேண்டியது.

மேலும் அப்போதும் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிக்க முடிவு செய்யப்பட்டது நான் தான் என பேசியிருக்கிறார் சியான் விக்ரம். இந்தத் தகவல் ரசிகர்களை மிகவும் குஷிப்படுத்தியுள்ளது. அத்தோடு விஜய் நடித்திருந்தால் இப்படம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் முக்கிமாகும். 


Advertisement

Advertisement

Advertisement