• Aug 29 2024

ஷாருக்கான் படத்தில் நடிக்க முடியாது என கூறிய விக்ரம்.. வாய்ப்பை தட்டி தூக்கிய உலக அழகியின் கணவர்...

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

ஷாருக்கான் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு சியான் விக்ரமுக்கு வந்ததாகவும் ஆனால் அந்த படத்தில் அவர் நடிக்க முடியாது என்று கூறிவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து உலக அழகியின் கணவருக்கு அந்த வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கடந்த ஆண்டு ‘ஜவான்’ ’டங்கி’ மற்றும் ‘பதான்’ ஆகிய  3 படங்களில் நடித்த நிலையில் 3 திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்போது ஷாருக்கான் தனது மகள் சுஹானா கான் உடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை சுஜாய் கோஷ் என்பவர் இயக்கவுள்ளார்.

முதன்முதலாக ஷாருக்கான் மற்றும் அவரது மகள் சுஹானா நடிக்கும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்திற்கு ‘ஜவான்’ திரைப்படத்தில் இசையமைத்த அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு 'கிங்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் முடிவடைந்து விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடித்த சியான் விக்ரம் இடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிகிறது. ஆனால் விக்ரம் வில்லனாக நடிக்க விரும்பவில்லை என்றும் அது மட்டும் இன்றி ’வீர தீர சூரன்’ படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் தன்னால் அதிக அளவு கால்ஷீட் ஒதுக்க முடியாது என்று விக்ரம் கூறியதாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து முன்னாள் உலக அழகியும் நடிகையுமான  ஐஸ்வர்யா ராயின் கணவர் அபிஷேக் பச்சன் இந்த படத்தில் வில்லனாக நடித்த இருப்பதாகவும் அவர் இந்த படத்தில் இணைவது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Advertisement

Advertisement